search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது ஆட்டோ மோதி கணவன்- மனைவி பலி
    X

    பைக் மீது ஆட்டோ மோதி கணவன்- மனைவி பலி

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). கட்டிட மேஸ் திரி. இவரது மனைவி ரூபா வதி (30). தம்பதிகளுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கணவன்- மனைவி சாவு

    தீனதயாளன் நேற்று மாலை அவரது மனைவி ரூபாவதியுடன் வேடல் காந்திநகரில் இருந்து பைக்கில் அரக் கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த சரக்கு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த தீனதயாளனின் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி ரூபாவதி ஆகிய இருவ ரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    டிரைவர் கைது

    இதில் கணவன், மனைவி இருவ ரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சோளிங்கரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சலீம் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×