என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் சாவு
- கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்து
- போலீசார் விசாரணை
வேட்டவலம்:
வேட்டவலம் தேரடி வீதியை சேர்ந்த வர் சண்முகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் அரிஹரன் (வயது 24), பொறியியல் பட்டதாரி.
இவர் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாகபெற்றோரிடம் கூறி விட்டு பைக்கில் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 8.30 மணியளவில் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைத் தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரிஹரன் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து அரிஹரனின் தந்தை சண்முகம் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






