search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness march"

    • துண்டு பிரசுரம் விநியோகம்
    • பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக "உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

    இதில் புற்றுநோய் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் பேசினார்கள். ஊர்வலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கல்லுரி மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    • நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
    • நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நான்குநேரி, மூன்றடைப்பு, மற்றும் மூலைக்கரைப்பட்டியில் இருந்து வந்திருந்த போலீசார் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    புறவழிச்சாலை வழியாக சென்ற ஊர்வலம் நாங்குநேரியில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது ஒலிப்பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணிந்தால் விபத்தில் சிக்கினால் கூட உயிர் தப்பலாம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இந்த ஊர்வலம் நாங்குநேரி திசையன்விளை செல்லும் ரோட்டில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவையான போது மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த அறிவுரை
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சேத்துப்பட்டு, மின்சார வாரிய கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு வார, விழா 14-ம்தேதி முதல் 20-ம் வரை நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு மின்சார சிக்கனம், மற்றும் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு, தலைமை தாங்கி கொடி அசைத்து விழிப்புணர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலய வளாகத்தில் இருந்து போளூர் சாலை, ஆரணி சாலை, காமராஜர் பஸ் நிலையம், வந்தவாசி சாலை, செஞ்சி சாலை, வழியாக மின்வாரிய கோட்ட அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது தேவையான போது மட்டுமே மின்விளக்குகள், மற்றும் மின்விசிறிகள், பயன்படுத்த வேண்டும், சுவிட்சுகள், பிளக்குகள், போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    இடி மின்னலின் போது மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பதாகளை ஏந்தியவாறு மின்சார வாரிய ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். ஊர்வலத்தில் உதவி செயற்பொறியாளர்கள் எழிலரசி, பக்தவாச்சலம், ரமேஷ் பாபு, மற்றும் மின்சார கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள், கலந்து கொண்டனர். முடிவில் நகர் பிரிவு உதவி மின் பொறியாளர் மோகனசுந்தரம், நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
    • மாணவிகள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் மின்சார துறை சார்பில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மின்சார உதவி செய்ய பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார். சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் இதில் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிக்கன வார குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் மின் சிக்கனம் குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மின்சிக்கன ஊர்வலத்தில் நகராட்சி துணைத் தலைவர் பழனி, உறுப்பினர்கள் அசோகன் அன்பரசு உள்பட நகராட்சி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    • வந்தவாசி பஜார் வீதி வழியாக சென்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.கார்வண்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.

    வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் தொடங்கிய ஊர்வலம் தேரடி, காந்தி சாலை, பஜார்வீதி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    ஊர்வலத்தில் சங்கச் செயலர் கே.குணசேகர், பொருளாளர் எம்.டோமினிக் சேவியோ, பயிற்றுநர் எஸ்.நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பதாகைகளை ஏந்திச் சென்றனர்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது.

    ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் பப்ளாசா தலைமை வகித்தார். செயலர் ஜின்ராஜ், பொருளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அனுராக் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

    ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் ஜெகன், ஆசிரியர்கள் ஆர்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விபத்துக்கள் குறித்து விளக்கப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு டாக்டர். டேவிட் விமல் குமார் தலைமை தாங்கினார். டாக்டர்.நிக்கி ரோஸ் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    ஊர்வலம் பஸ் நிலையம், சி.என்.ஏ ரோடு, நியூ டவுன் பகுதிகளில் ஊர்வலமாக மாணவ, மாணவிகள், டாக்டர்கள் சமூக ஆர்வலர்கள், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், குமார், செல்வராஜ் கருணைஇல்ல நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன், நியூடவுன் பி.சங்கர் உட்பட பலர் சென்றனர்.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியில் நகராட்சி அலுவலக வளாகத்தை வந்து அடைந்தது. அங்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் பேசினார். முடிவில் நகராட்சி என்ஜினீயர் சங்கர் நன்றி கூறினார்.

    • நடந்தை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் வசந்தா தலைமை வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் நடந்தை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் வசந்தா தலைமை வைத்தார். உறுதியேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    அதை தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு குறித்தவிழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் வசந்தா துவக்கி வைத்தார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணி, ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்
    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் எடுத்து ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    அரக்கோணம் எஸ். ஆர்.கே. தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

    இந்த ஊர்வலத்தை அரக்கோணம் ரவிஎம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் சமூகத்தில் எந்த ஒரு நற்செயலும் மாணவர்கள் இருந்தே தொடங்க வேண்டும்.

    மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். போதைப் பொருளை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாணவரிடமும் உள்ளது.

    அதற்கான முயற்சிகளை ஒவ்வொரு மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஊர்வலத்தில் சப் கலெக்டர் பாத்திமா ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ் செயலாளர் ராஜா நிர்வாகிகள் மனோகர் முரளி மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா பேராசிரியர்கள் ஜெகதா குமார் தமிழரசி செல்வக்கனி ஜெய்சங்கர் சாமுவேல் முரளி காந்தி செழியன் உடற்கல்வி இயக்குனர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்விற்கும் மேற்பட்ட

    100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் இன்று போதை ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் கே ரகுராமன் முன்னிலை வகித்தார்.

    செய்யாறு எம் எல் ஏ ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் திரு திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கோவேந்தன், கார்த்திகேயன், விஜயபாஸ்கர், கங்காதரன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், ஆசிரியர்கள் சரவணன், சக்தி நாராயணன், வரதன் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழா
    • பொதுமக்களுக்கு இனிப்பு

    திருப்பத்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே. மோகன் தலைமையில் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வழியாக வந்து அங்கிருந்த அண்ணா சிலைக்கு மற்றும் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகரசபை தலைவர் அரசு, நகர அவைத்தலைவர் ஸ்ரீதர் மாவட்ட பிரதிநிதிகள் பத்மநாபன், சந்திரசேகர் நகர துணைச் செயலாளர்கள் எஸ்.அண்பு, கோ.செல்வம், தமிழரசி இளங்கோவன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டிசி கார்த்திக் டிஎன்டி‌. கே.சுபாஷ், நகரமன்ற உறுப்பினர் பிரேம்குமார் வாசுதேவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×