என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

    • பதாகைகளை ஏந்திச் சென்றனர்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளி சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் நடைபெற்றது.

    ஊர்வலத்துக்கு பள்ளித் தாளாளர் பப்ளாசா தலைமை வகித்தார். செயலர் ஜின்ராஜ், பொருளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் அனுராக் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசி காந்தி சாலையில் தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இதில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

    ஊர்வலத்தில் பள்ளி முதல்வர் ஜெகன், ஆசிரியர்கள் ஆர்த்தீஸ்வரி, பத்மஜெயனி, தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×