என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு நடந்த காட்சி.

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்
    • பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் எடுத்து ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    அரக்கோணம் எஸ். ஆர்.கே. தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

    இந்த ஊர்வலத்தை அரக்கோணம் ரவிஎம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் சமூகத்தில் எந்த ஒரு நற்செயலும் மாணவர்கள் இருந்தே தொடங்க வேண்டும்.

    மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். போதைப் பொருளை ஒழித்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மாணவரிடமும் உள்ளது.

    அதற்கான முயற்சிகளை ஒவ்வொரு மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஊர்வலத்தில் சப் கலெக்டர் பாத்திமா ரோட்டரி சங்கத் தலைவர் சதீஷ் செயலாளர் ராஜா நிர்வாகிகள் மனோகர் முரளி மற்றும் கல்லூரி முதல்வர் கவிதா பேராசிரியர்கள் ஜெகதா குமார் தமிழரசி செல்வக்கனி ஜெய்சங்கர் சாமுவேல் முரளி காந்தி செழியன் உடற்கல்வி இயக்குனர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்விற்கும் மேற்பட்ட

    100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×