search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM robbery"

    • திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் கைதேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
    • 9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏ.டி.எம். கொள்ளையில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.

    கைதேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 4 ஏ.டி.எம்.களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை திருட்டு கும்பல் அரங்கேற்றியுள்ளது.

    குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம்.களை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மும்பையில் பெறப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.

    நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா ?போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன.
    • ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72 லட்சம் பணம் கொள்ளை போனது.

    நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.

    ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.

    அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

    கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.

    இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    வேலூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று 2-வது நாளாக லாட்ஜிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை போளூர் கலசப்பாக்கம் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

    • திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.
    • கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு கூறியிருப்பதாவது:

    * திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும்.

    * மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும்.

    * அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும்.

    * கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    * திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் திவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு எளிதாக சென்று விடும் நிலை உள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் திருப்பத்தூர் சாலையிலும் அதே போல் வாணியம்பாடியில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையிலும், வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுரோடு பகுதியில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், அவ்வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பேரணாம்பட்டு பத்திரபல்லி, பனமடங்கி, சேர்க்காடு, சோதனை சாவடி மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வேலூர் லாட்ஜிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினர். இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.

    திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் 'இண்டியா ஒண்' வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.

    இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.

    கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'இண்டியா ஒன்' ஏ.டி.எம். ஆகும்.

    இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    • போதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி பழைய பஸ் நிலை யம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணிவெற்றிலை காரர் தெருவை சேர்ந்த பால குமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி. எம். மையத்தின் பொறுப் பாளராக கவனித்து வருகிறார்.

    இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார்.

    அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடன டியாக கண்காணிப்பு கேம ராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பாலகுமரன் புகார்கொடுத்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேம ராவில் உள்ள உருவங்களை போலீசார் தொடர்ந்து விசா ரணை செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நக ராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
    • 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகரில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலை என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்க்கு காவலர் நியமிக்கப்படவில்லை.

    இதனை நோட்டமிட்ட வட மாநில வாலிபர் கடந்த 18-ந் தேதி காலை ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கருவியை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.

    அந்த கருவியை சேதப்படுத்தும் போது சத்தம் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பினார்.

    அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்த போது அது சேதப்ப டுத்தப்பட்டுள்ளதும், கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    தீவிர தேடுதல் வேட்டையில் பொன்ன கரம் பகுதியில் கட்டிட வேலைக்காக 10 நாட்க ளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த பீகார் மாநிலம் சோமனப்பள்ளி தாலுகா விற்கு உட்பட்ட பூர்ணியா ஜில்லாவைச் சார்ந்த ராஜு ரிஷிதேவ் என்பவரது மகன் சதானந்த் என்பவன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருச்சியில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணியின் மணிபர்சை கொள்ளையடித்த மர்மநபர் அதில் இருந்த ஏ.டி.எம்.ஐ எடுத்து ரூ.35ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கபிரியேல்புரத்தை சேர்ந்தவர் முருகவேல், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 30). இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று மருத்துவ பரிசோதனைக்காக ரம்யா அவரது தாய் மற்றும் குழந்தையுடன் திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் பரிசோதனையை முடித்து விட்டு ஊருக்கு புறப்பட்டார். வீட்டிற்கு சென்றதும் அவர் பேக்கில் வைத்திருந்த மணிபர்சை பார்த்த போது அதனை காணவில்லை. அதில் ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.1000 பணம் இருந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த நின்ற போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.தகவல் வந்து கொண்டிருந்தது.

    அதில் முதலில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10ஆயிரம், பின்னர் மறுமுறை ரூ.10ஆயிரம், அடுத்து ரூ.10ஆயிரம், ரூ.5ஆயிரம் என ரூ.35ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது.

    ரம்யாவின் வங்கி கணக்கில் ரூ. 43 ஆயிரம் வரை இருந்தது. அதில் ரூ.35 ஆயிரம் பணம் எடுத்ததற்கான தகவல் வந்ததையடுத்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.

    உடனே வங்கிக்கு விரைந்து சென்று,அதிகாரிகளிடம் நடந்த விவரத்தை கூறி, வங்கி கணக்கை பிளாக் செய்தார். பின்னர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், ரம்யா திருச்சிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பும் போது, மர்மநபர் மணிபர்சை திருடியுள்ளது தெரியவந்தது. ஏ.டி.எம். எண் ஞாபகத்திற்காக ரம்யா ஒரு தாளில் பின் நம்பரை எழுதி மணிபர்சில் வைத்திருந்தார். அது, ஏ.டி.எம்.கார்டை திருடிய மர்மநபருக்கு எளிதாக அமைந்துவிட்டது. அதன் மூலம் அவர் ரம்யா வங்கி கணக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளார். மேலும் அந்த மர்மநபர் மாந்துறையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.

    இதனால் அந்த ஏ.டி.எம். மைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர். பணத்தை அபகரித்த மர்மநபரை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள ஏடிஎம் முன் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பீகாரை சேர்ந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, நூதன முறையில் ரூ.1½ லட்சம் வரை கொள்ளையத்திருப்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் முதல் மர்ம கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மட்டும் குறிவைத்து கைவரிசை காட்டியது. இது தொடர்பாக 5 பேர் அடுத்தடுத்து அண்ணாசதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில், உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோரது தலைமையில் ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், போலீஸ்காரர்கள் சங்கர், சக்தி, சதாசிவம், சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே ரகசியமாக கண்காணித்தனர்.

    இந்த நிலையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பீகார் கும்பல் ஒன்று தனிப்படை போலீசிடம் சிக்கியது. அவர்களது பெயர் முன்னுகுமார், மனோகர்குமார் என்பது தெரிய வந்தது.


    அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    பிடிபட்ட கொள்ளையர்கள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை எடுத்து முடித்த பின்னர் தங்களது ஏ.டி.எம். செயல்பாட்டை முழுமையாக முடிக்காமல் (கேன்சல் செய்வது வரை) செல்வார்கள். இதுபோன்ற நபர்களை கண்காணிப்பதற்காக திடீரென ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று விடுவோம்.

    2 பேரில் ஒருவர் அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதுபோல நடிப்போம். அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம்.

    ஏ.டி.எம்.மில் முழுயையாக செயல்பாட்டை முடிக்காமல் செல்லும் நபர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு பின்நம்பரை மீண்டும் போட்டு பணத்தை எடுப்போம். இதுபோன்று ரூ.1½ லட்சம் வரையில் பணம் எடுத்துள்ளோம்.

    இவ்வாறு கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.

    இந்த பணத்தை கொள்ளையர்களில் ஒருவன் தனது தாயின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் வேறு எந்த ஏ.டி.எம். மையத்திலாவது இருவரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் அலவலக ஊழியரான சீனிவாசன் என்பவர் ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.

    பழைய ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டுமே இதுபோன்று நூதன முறையில் பணம் எடுக்க முடியும் என்று கொள்ளையர்கள் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.

    சிந்தாதிரிப்பேட்டையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கிளை ஏ.டி.எம். எந்திரம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். போன்று பழைய ஏ.டி.எம். என்றும் கொள்ளையர்கள் கூறியுள்ளனர். எனவே அங்கும் கைவரிசை காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற ஏ.டி.எம். எந்திரங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    பீகார் கொள்ளையர்கள் கடந்த 4 மாதங்களில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புகார் அளிக்கவில்லை. இதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் பிடிபட்டார். #ATMrobbery

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பஸ் ஸ்டாப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று பணம் நிரப்ப வந்த அலுவலர்கள் கதவு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    ‌ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமிராவின் ஒயர்களும் துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏ.டி.எம். மையத்துக்கு வந்த கொள்ளையன் ஹெல்மெட் அணிந்திருந்தார்.

    மையத்துக்குள் புகுந்ததும் ஹெல்மெட்டை கழற்றி விட்டு தனது உருவம் கேமராவில் பதிவாகாமல் இருக்க அதன் ஒயர்களை துண்டித்துள்ளார். அதன்பிறகு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஆனால் 2-வது லாக்கரை உடைக்க முடியாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை.

    இதனால் அவர் அங்கிருந்து தப்பி சென்றார். ஒயர்களை துண்டிக்கும வரை அவரது உருவம் வங்கி மையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஆத்தூர் சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் காசிமாயன் (வயது21) என தெரிய வந்தது.

    இததைனயடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். காசிமாயன் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ATMrobbery

    ×