search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம். கொள்ளை"

    • திருவண்ணாமலையில் பிப்ரவரி 12-ம் தேதி 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளை போனது.
    • இதுகுறித்து தனிப்படை போலீசார் அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.

    மேலும், இவ்வழக்கில் கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (வயது 35) என்பவரை கைது செய்தனர். இவர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்ற போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.

    அரியானா - ராஜஸ்தான் எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் ஆசீப் ஜாவேத் என்பவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

    • டிரைவராக செயல்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

    இவர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்ற போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது.

    • ைகதான 5-வது நபர் ஜெயிலில் அடைப்பு
    • ரூ.2 லட்சம், கார் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளை யடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளி களை பிடிக்க முடியவில்லை. ரூ.69 லட்சம் வரை பணமும் மீட்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது.

    விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்ப வத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர்.

    அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். நடவ டிக்கையில் ஈடுபட்டனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரியானாவில் தனிப்ப டையினர் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
    • 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர் :

    வடலூர் ராகவேந்தி ரா சிட்டியில் தேசியமய மாக்கப்பட்ட இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் முகப்பில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கிருந்த அலாரம் ஒலிக்கவே மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியதோடு, அதிலிருந்த ஒரு நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மீதமிருந்த 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் வடலூர் கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 56), வடலூர் ஆர்.கே. நகர் ராஜேந்திரன் (34), நெய்வேலி இந்திராநகர் ராஜா (42) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் இந்தியன் வங்கி ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீது கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜபாளையத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகரில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. பிரதான சாலை என்பதாலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி என்பதாலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்க்கு காவலர் நியமிக்கப்படவில்லை.

    இதனை நோட்டமிட்ட வட மாநில வாலிபர் கடந்த 18-ந் தேதி காலை ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் கருவியை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.

    அந்த கருவியை சேதப்படுத்தும் போது சத்தம் வரவே கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பினார்.

    அக்கம் பக்கத்தினர் ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்த போது அது சேதப்ப டுத்தப்பட்டுள்ளதும், கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) சபரிநாதன் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார், கைரேகை நிபுணர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தங்கி பணி செய்யும் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    தீவிர தேடுதல் வேட்டையில் பொன்ன கரம் பகுதியில் கட்டிட வேலைக்காக 10 நாட்க ளுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த பீகார் மாநிலம் சோமனப்பள்ளி தாலுகா விற்கு உட்பட்ட பூர்ணியா ஜில்லாவைச் சார்ந்த ராஜு ரிஷிதேவ் என்பவரது மகன் சதானந்த் என்பவன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×