search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். கொள்ளையில் ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல்
    X

    ஏ.டி.எம். கொள்ளையில் ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல்

    • ைகதான 5-வது நபர் ஜெயிலில் அடைப்பு
    • ரூ.2 லட்சம், கார் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளை யடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளி களை பிடிக்க முடியவில்லை. ரூ.69 லட்சம் வரை பணமும் மீட்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது.

    விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்ப வத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர்.

    அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். நடவ டிக்கையில் ஈடுபட்டனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அரியானாவில் தனிப்ப டையினர் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும்.

    மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×