search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazagan"

    • புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் மற்றும் வெள்ளரி பழம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.
    • இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அம்மா அறக்கட்டளை சார்பில் உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பிள்ளு கடை சந்திப்பு, துறைமுகம் மெயின் கேட், கல்லரை வீதி சந்திப்பு, அவ்வை நகர் அகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் வீரம்மாள், மாநில துணை செயலாளர் காந்தி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன், மாநில எம். ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெங்கடேசன்,ஏம்பலம் தொகுதி செயலாளர் சம்பத் உப்பளம் தொகுதியை சேர்ந்த சவரிநாதன், சிவா, செல்வம், ரமேஷ், குணாளன், பாக்கியராஜ், ரெமோ, நாகராஜ், சங்கர், சரத், இஸ்மாயில், ரியாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும்.
    • மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அமைச்சரவைக்கு முழு அதிகாரம் உருவாக்க அலுவலக விதியில் திருத்தம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை காண வேண்டும். அரசின் துறைகளை சீர்செய்ய ஒர்க் ஸ்டடி குரூப் ஒன்று அமைக்க வேண்டும்.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நியாயமான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கும் ரூ.500 மானிய உதவியாக அரசு வழங்க வேண்டும். தனியார் மற்றும் கோவில் இடங்களில் வசிப்போருக்கு அவரவர் கூரை வீடுகளை கல்வீடாக மாற்றிக் கொள்ள ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.

    நகரப் பகுதி முழுவதும் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழி காண வேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்கள், மணி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நிதி நிலைமைக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் கொண்டு, வர வேண்டும். தனி கல்வி வாரியம், விளையாட்டுத் துறைக்கு தனி இயக்குனரகம், அமைக்க வேண்டும்.

    அரசுத் துறைகளில் கடன் பாக்கி வைத்துள்ளோருக்கு வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்து அசலை செலுத்த வாய்ப்பு அளித்தால் கடன் வசூலாகும். மதுபானம் கொள்முதல், விநியோகம் ஆகிய இரண்டையும் அரசே ஏற்று நடத்த தனி கார்பரேஷனை ஏற்படுத்த வேண்டும்.

    ரோடியர் மில் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சர்வ தேச ஐ.டி. பூங்கா, சேதராப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழில் பூங்கா அமைத்தால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். ஓய்வு பெறும் நிரந்தர அங்கன்வாடி ஊழியாகளுக்கு அரசு துறைகளில வழங்கப்படும் பென்ஷன், மற்றும் ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்.

    புதுவை, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துக்களை மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப நகராட்சிகளாக மாற்றம் வேண்டும்.

    அரசுத் துறையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் ஓ.பி.சி., எஸ்.சி., பொதுபிரிவினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். ஏழை பள்ளி மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளிகளில் மீண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
    • பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 12 ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணிஅரசில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதற்கு அ.தி.மு.க. சார்பில் பாராட்டுக்கள். தி.மு.க., கூட்டணி கட்சிகள் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க., கூட்டணி கட்சிகள் அங்கு குரல் கொடுக்காமல் மக்களிடையே வெற்று முழக்கத்தை கூறுவது சரி அல்ல. வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்தை பெற, மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்-அமைச்சர் உட்பட அனைத்து  எம்.எல்.ஏ.க்களும் 2 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும்.

    புதுவைக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

    பிரதமர் மோடியின் விருப்பப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி ரேஷன் கடைகளை திறந்து பொதுவிநியோக திட்டத்தை வழங்க வேண்டும். இதற்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு வழிசெய்ய வேண்டும்.

    புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை மாணவர்களுக்கு வழங்க உறுதியான நடவடிக்கையை கவர்னர், முதல்-அமைச்சர் எடுக்க வேண்டும். 10 ஆண்டாக வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 5 ஆண்டு அரசு வேலைவாய்ப்பு வயது வரம்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 35 வயதாகவும், ஒ.பி.சி. 37 வயதாகவும், எஸ்.சி. பிரிவினருக்கு 40 வயதாக மாற்றி தளர்வு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
    • 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

    கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
    • புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.நீர்த்துப்போன இந்தி திணிப்பு கோஷத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றும் வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல்.

    தமிழே சொல்லிக்கொடுக்காத பல கல்வி நிறுவனங்கள் உள்ளது. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்தியை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக் கொள்ள நினைக்கும் இன்றயை காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்தியை கற்க கூடாது என நினைக்கும் தி.மு.க.வின் செயல் கண்டிக்கத்தக்கது.

    புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை பின்பற்றப்படவில்லை.புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

    பா.ஜனதா கூட்டணி ஆட்சி தான் புதுவையில் நடந்து வருகிறது. ஆனால் 50 சதவீதம் இடத்தை பெற ஏன் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை கவர்னர் அமல்படுத்துவாரா? ஏன் இதுவரை அமல்படுத்தவில்லை? இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி களின் உரிமையாளர்களிடம் சாதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வாங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஏன் தனியார் மருத்துவ கல்லூரில் வாங்காமல் அதிகமாக வாங்குகின்றனர்.கட்டண நிர்ணய குழு தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
    • கவர்னர் தமிழிசை தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    தனது தாயார் கமலா அம்மாளிடம் ஆசி பெற்றார். அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் தலைமையில் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் முன்னிலையில் மாநில செயலாளர் அன்பழகன் நீடூழிவாழ வேண்டிய 8:30 மணிக்கு அளவில் மனக்குள விநாயகர் ஆலயத்தில் அ.தி.மு.க.வினர் தங்க தேர் இழுத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள்.

    புதுவை கவர்னர் தமிழிசை தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, மகாதேவி,.மாநில துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர்கள், அன்பழக உடையார், மாநில துணைச் செயலாளர்கள் பெரியசாமி, கிருஷ்ண மூர்த்தி, எம்.ஏ.கே. கருணாநிதி, காந்தி, சேரன், குணசேகரன், கணேசன், மூர்த்தி, நாகமணி, மணவாளன், குமுதன், மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ,மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல்.

    இளைஞர் , இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன்,மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு |மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா, தொகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆறுமுகம்,பாஸ்கர், துரை, பொன்னுசாமி, கருணாநிதி, ராஜா, சம்பத், நடேசன், குணசேகர், கிருஷ்ணன், கமல் தாஸ், வேலவன்.மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும்
    • அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தின் இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். இந்த இருண்ட ஆட்சிக்கு தலைமை வகித்த நாராயணசாமி, தேசிய ஜனநாயக முன்னணி அரசை அடிமை ஆட்சி என கூறுவது கண்டனத்திற்குரியது.

    கட்சி தலைமையை திருப்திப்படுத்த, விளம்பர மோகத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். மக்கள் புறக்கணிப்பார்கள் என புரிந்துகொண்டு தேர்தலில் போட்டியிடாமல் வஞ்சகத்தோடு ஒளிந்து கொண்டார். அவர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சி பற்றி குறைகூற தார்மீக உரிமை இல்லை.

    நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சாவர்க்கர் போன்றவர்களை பற்றி குறைத்துப் பேச நமக்கு என்ன தகுதி உள்ளது? என நாராயணசாமி உணர வேண்டும்.

    மத்திய அரசின் போதிய நிதி பெற முடியாத சூழ்நிலையிலும், மத்திய அரசுடனும், கவர்னருடனும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி ரங்கசாமி நல்லாட்சி நடத்துகிறார்.

    சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாராயணசாமி கிடப்பில்போட்டார். தற்போது இத்திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் பட்டு வருகிறது. கடந்த காலத்தில் கிடப்பில் போட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தரம் தாழ்ந்து முதல்-அமைச்சரையும், அரசையும் விமர்சனம் செய்வது மதிப்புமிக்க செயல் இல்லை. எனவே நாராயணசாமி அரசை விமர்சனம் செய்யும்போது நாவடக்கத்துடன் விமர்சனம் செய்வது நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
    • காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை

    யில் அ.தி.மு.க.வினர் சந்தித்து ஆறுதல் கூறி பிஸ்கட், ரொட்டி, பழம் வழங்கினர். பின்னர், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    காரைக்காலில் காலரா பரவி நிலை மோசமானதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

    காரைக்கால் மாவட்ட மக்கள் அதிகாரிகளின் தவறான செயல் பாட்டி னால் விரக்தியின் விளிப்பிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். முதல்-அமைச்ர் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி, உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலராவால் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை

    முதல்-அமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. அசனா, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாவட்ட இணை செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் குரு மூர்த்தி மற்றும் காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    ×