என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கவர்னர் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
- கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
- புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 மாதகாலமாக ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.விற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.நீர்த்துப்போன இந்தி திணிப்பு கோஷத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றும் வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல்.
தமிழே சொல்லிக்கொடுக்காத பல கல்வி நிறுவனங்கள் உள்ளது. மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இந்தியை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்துக் கொள்ள நினைக்கும் இன்றயை காலத்தில் அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் இந்தியை கற்க கூடாது என நினைக்கும் தி.மு.க.வின் செயல் கண்டிக்கத்தக்கது.
புதுவையில் நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை பின்பற்றப்படவில்லை.புதுவையில் உள்ள 1400 மருத்துவ சீட்டுகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 700 சீட்டுகள் பெற வேண்டும். நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
பா.ஜனதா கூட்டணி ஆட்சி தான் புதுவையில் நடந்து வருகிறது. ஆனால் 50 சதவீதம் இடத்தை பெற ஏன் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையை கவர்னர் அமல்படுத்துவாரா? ஏன் இதுவரை அமல்படுத்தவில்லை? இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி களின் உரிமையாளர்களிடம் சாதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.
வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வாங்கப்பட்டு வருகிறது. அதே போல் ஏன் தனியார் மருத்துவ கல்லூரில் வாங்காமல் அதிகமாக வாங்குகின்றனர்.கட்டண நிர்ணய குழு தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்