search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amaravathi dam"

    • ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது
    • அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

    இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட ராஜவாய்க்கால்களான ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சா்க்காா் கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், கடத்தூா், காரத்தொழுவு ஆகிய 8 வாய்க்கால்களுக்கு மே 16-ந்தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீா் தேவைகளுக்காகவும், நிலைப்பயிா்களை காப்பாற்றவும் புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு அணையில் இருந்து நேற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இது குறித்து பொதுப்பணித்துறையினா் கூறுகையில், நேற்று முதல் ஜூலை 11-ந்தேதி வரை 15 நாள்களுக்கு மொத்தம் 571 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட உள்ளது என்றனா். தற்போது 90 அடி உயரமுள்ள அணையில் நீா்மட்டம் 67 அடியாக உள்ளது.அணைக்கு உள்வரத்தாக 316 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2,182 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. ஆற்றில் 250 கன அடி, பிரதான கால்வாயில் இருந்து 440 கன அடி என மொத்தம் 690 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. 

    • பருவமழை தீவிரமடைந்தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தாமதமாகி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், தலையாறு, மறையூர், சின்னாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் பருவமழை துவங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

    பருவமழை தீவிரமடைந்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில் 66.97 அடி நீர்மட்டம் உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 312 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாக வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர், பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாய் மதகு வழியாக நாளை முதல் ஜூலை 11-ந்தேதி 571 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

    இதையடுத்து நாளை அமராவதி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது .ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 77.30 அடியாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் அணை நிரம்பி வழிந்தது .எனவே தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது.
    • காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும்.

    உடுமலை,

    உடுமலை அமராவதி அணையில் மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில்வ ளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன.வழக்கமாக கோடை காலத்தில்அணை நீர்மட்டம் குறைந்து மீன் பிடிபடுவது அதிகரிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக அணை நீர்மட்டம், குறையவில்லை.மேலும் பலத்த காற்று காரணமாக, பரிசல் இயக்க சிரமம் ஏற்படுவதுடன் விரிக்கும் வலை இழுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி குறைந்துள்ளது. பருவமழை சீசன் துவங்கும் முன், காற்றின் வேகம் குறைந்தால் மீண்டும் மீன் பிடி தொழில் தீவிரமடையும் என எதிர்பார்க்கின்றனர்.

    • மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர் வரத்து உள்ளது .


    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 62 அடியாக இருந்தது.

    இந்நிலையில் 5 மாத இடைவெளிக்குப் பின் நேற்று முன்தினம் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது.

    தற்போதைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர் வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது என்றனர்.




    அமராவதி அணை தண்ணீர் கரூருக்கு வந்ததால் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கரூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரமும், 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 62 அடி நீர் மட்டம் இருந்தது. 
    அமராவதி நீரை நம்பி கரூர், திருப்பூர் மாவட்டங் களில் 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. குடிநீருக்காகவும், அமராவதி ஆற்றையே மக்கள் சார்ந்துள்ளனர். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அமராவதி அணையில் இருந்து கடந்த 13-ந்தேதி விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

    நேற்று முன்தினம் நீர் வெளியேற்றம் 1,700 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு 10 நாட்களுக்கு திறக்கப்படும். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்ட எல்லைப்பகுதியான சின்னதாராபுரம் அருகே உள்ள அணைபுதூர் தடுப்பணையை நேற்று முன்தினம் வந்தடைந்தது. 

    பிறகு தடுப்பணையை தாண்டி கரூருக்கு தண்ணீர் வந்தது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை சீராக வாய்ப்புள்ளது. ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ×