search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allu Arjun"

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

     

    புஷ்பா 

    புஷ்பா 


    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    புஷ்பா 

    புஷ்பா 

    இந்நிலையில் புஷ்பா-தி ரூல் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து இவர் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


    அல்லு அர்ஜுன் பகிர்ந்த புகைப்படம்

    'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பூஷன் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த கூட்டணிக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சந்தீப் ரெட்டி வாங்காவின் மந்திரம் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடும் ஒன்று. நெடுங்காலமாக நினைவில் நிற்கும் ஒரு படத்தை தருவோம் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    புஷ்பா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன்படி, 'புஷ்பா-தி ரூல்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில் ரசிகர்களான தங்களில் ஒருவரின் தந்தை நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த செய்தி அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு சென்றுள்ளது. ரசிகரின் இந்த நிலையை அறிந்ததும் நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழுவினர் மூலம் உதவி செய்துள்ளார். இதனை அதே ரசிகர் மன்றம் தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளது. இந்த செயலால் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் சமீபத்தில் படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    புஷ்பா படக்குழு

    புஷ்பா படக்குழு

    'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 01.12.2022 அன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    புஷ்பா

    புஷ்பா

    இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யாவில் வசூல் சாதனை நிகழ்த்திவருவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரஷ்யாவில் 25 நாட்களை கடந்து 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான படம் புஷ்பா.
    • இப்படம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

     

    இந்நிலையில் 'புஷ்பா' படம் ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்று (01.12.2022) படக்குழு முன்னிலையில் திரையிடப்பட்டது. இதற்காக இயக்குனர் சுகுமார், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மேலும் ரஷ்யாவின் 24 நகரங்களில் நடைபெற இருக்கும் ஐந்தாவது இந்தியத் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் 'புஷ்பா' திரைப்படம் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
    • இப்படத்தின் இரண்டாம் பகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதிலும் முதல் பாகத்தில் இருந்தது போல் சமந்தாவின் பாடல் காட்சி ஒன்று இருக்கும் என்று கூறப்பட்டது.


    புஷ்பா

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்.
    • இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படம் வசூலை அள்ளியது.
    • இவர் தற்போது விளம்பரங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் - நடிகைகள் சினிமாவோடு சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பர பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகையை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன.

     

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

    தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனங்கள் பார்வையில் இருக்கிறார். அல்லு அர்ஜுன் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த புஷ்பா படம் வசூலை அள்ளியது. இதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

    அல்லு அர்ஜுன்

    அல்லு அர்ஜுன்

     

    புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளதால் 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அவரை அணுயுள்ளன. இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு விளம்பரத்துக்கு ரூ.9 கோடி வரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் இந்தி நடிகர்களுக்குத்தான் இதுபோல் அதிக விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கில் முன்னணி இயக்குனர் அல்லு அர்ஜூன்.
    • இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    அல்லு அர்ஜூன்

    இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவரை சந்தித்து அவர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து அல்லு அர்ஜுன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகிறது.
    • புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

     

    புஷ்பா 2

    இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

    ×