search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Constable"

    • பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
    • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

    பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.

    இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா வெற்றி பெற்றார்.
    • அவரை சண்டிகர் ஏர்போர்ட்டில் குல்விந்தர் கவுர் என்ற பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையானது.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியது.

    இதையடுத்து, குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இசை அமைப்பாளரும், பாடகருமான விஷால் தத்லானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் வீராங்கனைக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அந்தப் பதிவில், சம்பவத்தின் வீடியோ அறிக்கையை வெளியிட்டு, நான் வன்முறையை எப்போதும் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எப். பணியாளர்களின் கோபத்தின் அவசியத்தை முற்றிலும் புரிந்துகொள்கிறேன். சி.ஐ.எஸ்.எப். சார்பில் அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்வதற்குத் தேர்வுசெய்யும் பட்சத்தில் அவருக்கு ஒரு வேலை காத்திருக்கிறது என்பதை நான் உறுதிசெய்கிறேன், ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான், ஜெய் கிசான் என பதிவிட்டுள்ளார்.

    • தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று கங்கனா தெரிவித்தார்.
    • கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.

     

    இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதர்க்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கங்கனா ரனாவத், தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு நடந்தது குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பது சரியல்ல என்றும் தெரிவித்திருந்தார். 

    ×