search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valentine Day"

    • காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.
    • காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது.

    சென்னை:

    வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை களை கட்டத்தொடங்கி உள்ளது.

    காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.

    காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக 25 ரோஜா பூக்களை காம்புடன் கட்டி அதை அழகுபடுத்தி பூங்கொத்தாக விற்பனை செய்ய குவித்து வைத்துள்ளனர். இந்த ஒரு கட்டு ரோஜாவின் விலை இன்று ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது நாளை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து கோயம்பேடு பூவியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா கூறியதாவது:-

    ரோஜா பூ விற்பனை இன்று வரை சூடுபிடிக்க ஆரம்பிக்கவில்லை. நாளை முதல் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் 2 நாட்களுக்கு ரோஜா பூக்கள் அதிகமாக ஓசூரில் இருந்து வந்திறங்கிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது. டீசர்ட்டுகளில் காதலர் சின்னம் வரைந்தும், செயின், கம்மல், பர்ஸ், பேனா ஆகியவைகளில் காதலர் சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனையாகிறது அதை ஆர்வமுடன் இளசுகள் வாங்கிச் செல்கின்றனர்.

    • காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.
    • காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர்.

    கன்னியாகுமரி:

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி நாடு முழுவதும் உலக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

    காதலர் தினத்தன்று காதல் ஜோடியினர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகள் வழங்கியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த அடிப்படையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக காதல் ஜோடியினர் இப்போதே பரிசுப் பொருட்களை தேடி அலையத் தொடங்கி விட்டனர். கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடியினர் வந்து பரிசுப் பொருட்களை தேடி அலைந்த வண்ணமாக இருந்தனர். காதலர் தினத்தன்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை விதவிதமாக வாங்கி செல்கின்றனர்.

    கன்னியாகுமரி கடற்கரையில் இருக்கும் சங்கு வியாபாரிகளிடம் காதல் ஜோடியினர் தங்களது காதலர்களின் பெயர்களை எழுதி பரிசுப் பொருட்களாக வாங்கி செல்கின்றனர். அதேபோல ஒரே அரிசியில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி வாங்கிச் செல்கின்றனர். மேலும் காதலர் தின வாழ்த்து அட்டைகளையும் கடைகளில் வாங்கிச் செல்கின்றனர்.

    காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரியில் காதல் ஜோடியினர் இப்போதே வரத் தொடங்கி விட்டனர். இதனால் கடற்கரையில் காதல் ஜோடிகள் அத்துமீறுகிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் மறைவான இடங்களில் அத்துமீறி செயல்படும் காதல் ஜோடியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் இயர்பட்ஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • நத்திங் போன் (2) மாடல் பற்றிய தகவலை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    நத்திங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு காதலர் தினத்தை ஒட்டி விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. நத்திங் போன் (1) மற்றும் இயர் (ஸ்டிக்) உள்ளிட்ட மாடல்களுக்கு காதலர் தின சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நத்திங் போன் (1) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இயர் (ஸ்டிக்) மாடல் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இரு சாதனங்களும் பிரத்யேக டிசைன், க்ளிஃப் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றன. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பிரத்யேக டுவிஸ்டிங் சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், எல்இடி ஸ்ட்ரிப்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலில் 12.6mm டைனமிக் டிரைவர்கள், க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம், மூன்று HD மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    காதலர் தினத்தை ஒட்டி நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் தற்போது ரூ. 6 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 8 ஆயிரத்து 499 ஆகும். அந்த வகையில் நத்திங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுக்கு ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று நத்திங் போன் (1) மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மூன்று வித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் நத்திங் போன் (1) தற்போது ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    • காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம்.
    • பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்தியாவிலும் இப்போது காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது. பெரு நகரங்களில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதுபோல காதலர் தினத்தன்று சுற்றுலா தலங்கள், பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சுற்றி திரிவதையும் காணலாம். மேலும் அன்றைய தினத்தில் காதல் ஜோடிகள் பரிசு பொருட்கள் பரிமாறி கொள்வது, காதலை வெளிப்படுத்துவது என சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறும்.

    இப்படி களை கட்டும் காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவு தெரிவிப்போரும், எதிர்ப்பு காட்டுவோரும் உள்ளனர். காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம் என்றும் அதனை புறந்தள்ள வேண்டும் என்று ஒரு சாராரும்,

    இல்லவே இல்லை, காவிய காலம் தொட்டு காதல் இருந்து வருகிறது. அதனை வெளிகாட்டும் நாள் தான் காதலர் தினமென்று இன்னொரு சாராரும் கூறி வருகிறார்கள். இதனால் இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை விரட்டும் சம்பவங்களும், கழுதைக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு. இதுபோல சில காதல் ஜோடிகள் பொதுவெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சாலையில் நடந்து செல்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தவும் செய்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று மத்திய கால்நடை பராமரிப்பு துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பசு பால் தருவதோடு மட்டுமல்ல அன்னையாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே தாய் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வருகிற 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம்.

    பசுக்களை அணைப்பதன் மூலம் உணர்ச்சி பெருகி, மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை கைவிட்டு நமது பாரம்பரியத்தை பாதுகாப்போம்.

    வேதங்களில் பசுக்களின் முக்கியத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த மரபுகளை தொடர்ந்து செய்ய 14-ந் தேதி பசுக்களை அரவணைத்து அன்பை வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறினார். #ValentineDay
    ஓசூர்:

    ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-

    நடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10 ரூபாயில் இருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

    நடப்பு ஆண்டு, ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒரு ரோஜா 16 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ValentineDay

    ×