search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் ரோஜா பூக்கள்
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் ரோஜா பூக்கள்

    • காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.
    • காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது.

    சென்னை:

    வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜா பூ விற்பனை களை கட்டத்தொடங்கி உள்ளது.

    காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஓசூரில் இருந்து ரோஜா பூக்கள் அதிகமாக கோயம்பேடுக்கு வந்துள்ளது.

    காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசாக கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக 25 ரோஜா பூக்களை காம்புடன் கட்டி அதை அழகுபடுத்தி பூங்கொத்தாக விற்பனை செய்ய குவித்து வைத்துள்ளனர். இந்த ஒரு கட்டு ரோஜாவின் விலை இன்று ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது நாளை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து கோயம்பேடு பூவியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா கூறியதாவது:-

    ரோஜா பூ விற்பனை இன்று வரை சூடுபிடிக்க ஆரம்பிக்கவில்லை. நாளை முதல் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். வரும் 2 நாட்களுக்கு ரோஜா பூக்கள் அதிகமாக ஓசூரில் இருந்து வந்திறங்கிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காதலர் தினத்தையொட்டி கடைகளில் பரிசுப்பொருட்கள் விதவிதமாக விற்பனையாகிறது. டீசர்ட்டுகளில் காதலர் சின்னம் வரைந்தும், செயின், கம்மல், பர்ஸ், பேனா ஆகியவைகளில் காதலர் சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனையாகிறது அதை ஆர்வமுடன் இளசுகள் வாங்கிச் செல்கின்றனர்.

    Next Story
    ×