search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the crowd"

    • சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
    • நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சேலம் மாவட்டத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளி எடுக்க மாநகர் பகுதிக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவில் பொதுமக்கள் ஜவுளி எடுக்க வந்திருந்தனர். இதனால் சேலம் முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ்நிலையம், பேர்லேண்ட்ஸ் பகுதி உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது.

    நேற்று இரவு மழையை பொருட்படுத்தாமலும் மக்கள் ஜவுளி எடுக்க அதிகளவில் வந்திருந்தனர். அதே போல் இன்று காலை முதலே ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் தீவிர ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கண்காணிப்பு

    மேலும் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீசார் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் இருந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

    நேரம் செல்ல, செல்ல இன்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் நகை கடைகள், இனிப்பு கடை களிலும் கூட்டம் அதி கரித்து காணப்பட்டது. ஜவுளி எடுக்க வந்தவர்களால் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதியது. 

    • அண்ணாமலை நடைபயணத்துக்கு மதுரை பொதுக்கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
    • பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது

    மதுரை

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் வருகிற 5-ந்தேதி தொடங்கி 4 நாட்கள் நடை பயணம் செல்கிறார். இதையொட்டி 7-ந்தேதி மாலை பழங்கா நத்தம் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகி றார். மத்திய இணை மந்திரி மன்சூக் மாண்டவியா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    இந்த பொதுக் கூட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட மேற்பார்வை யாளர்கள் கார்த்திக் பிரபு, ராஜரத்தினம், விருந் தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சதீஷ்குமார் சகாதேவன் முருகேஷ் பாண்டியன் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து நிருபர்க ளிடம் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரை வரும் அண்ணாமலைக்கு 5-ந்தேதி ஜான்சிராணி பூங்காவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 7-ந்தேதி பழங்காநத்தத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கலந்து கொள்வார் கள் என எதிர் பார்க்கிறோம் என்றார்.

    • சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ×