search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipoosam"

    • தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
    • வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.

    காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

    தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.

    மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.

    அகரம்+உகரம்+மகரம்=ஓம்

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.

    அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி

    * சந்திரன் என்பது மனஅறிவு.

    * சூரியன் என்பது ஜீவ அறிவு.

    * அக்னி என்பது ஆன்மா அறிவு.

    சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம்.

    மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

    • கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
    • மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.

    தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

    அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,

    தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,

    கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,

    மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.

    அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.

    அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,

    வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.

    அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.

    ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

    • வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
    • வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.

    மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.

    வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.

    1. கறுப்புத்திரை - மாயசக்தி,

    2. நீலத் திரை- திரியா சக்தி,

    3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,

    4. பச்சைத் திரை- பராசக்தி,

    5. பொன்திரை- ஞானசக்தி,

    6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,

    7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.

    • தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
    • உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

    தைப்பூச சிறப்புகள்:

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

    சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.

    இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார்.

    இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

    தைப்பூச விரத முறை:

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.

    தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.

    உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.

    மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

    • தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
    • தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

    இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

    இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தைப்பூச வழிபாடு:

    நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும்.

    முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.

    தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    ×