search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tailor arrested"

    பல்லடம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்த டெய்லர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பல்லடம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் சவுந்திரபாண்டி(வயது 27). இவர் கடந்த 3 வருடங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். 

    இந்தநிலையில் சவுந்திரபாண்டிக்கு பனியன் கம்பெனியில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த சமயத்தில் சவுந்திரபாண்டி திருமணம் செய்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.

    பின்னர் கடந்த 2 மாங்களுக்கு முன்பு சவுந்திரபாண்டி ஊருக்கு சென்றார். மீண்டும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி மயங்கி கீழே விழுந்தார். அவரை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து பெற்றோர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் சவுந்திரபாண்டியுடன் பழகியதால் கர்ப்பமானதாக கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சவுந்திரபாண்டியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சிறுமியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் ஊருக்கு சென்ற சவுந்திரபாண்டி சிறுமியிடம் பழகியதை மறைத்து கடந்த 9-ந் தேதி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சவுந்திரபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 62). இவர், தனது வீட்டிலேயே டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரிடம், 15 வயதுடைய சிறுமி ஒருவர், துணி தைக்க சென்றார். அப்போது அந்த சிறுமியிடம் அளவு எடுக்க வேண்டுமென கூறி வீரமுத்து வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

    பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை வீரமுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்தது. பின்னர் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    ×