search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tv theft"

    • தேவகோட்டை அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • நகை-பணம் கிடைக்காததால் டி.வி.யை திருடிச்சென்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி (வயது 65). இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கோவையிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார்.

    அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் இன்று காலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி.டி.வி. திருடப்பட்டு இருந்தது.

    மேலும் வீட்டில் உட்புறம் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகைகள்-பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

    சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேககைளை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டு வருகின்றனர்.

    ராம்நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவத்தால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தேவகோட்டை நகரில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து அவரவர் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று டி.எஸ்.பி. கணேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

    • சம்பவ த்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பவானி ரோடு சோளிபாளையம் பகுதியை ேசர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மனைவி குஞ்சம்மாள். இவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ராமசாமி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விவசாய விளைபொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனி தனி யாக வசித்து வருகிறார்கள்.

    இதனால் ராமசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    அவர் ேவலை முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். 

    வீடு புகுந்து டி.வி.-செல்போன்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை-தேனி மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 49). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். சம்பவத்தன்று வீடு திரும்பிய ராமன்  வீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீல் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தல்லாகுளம் சொக்கநாதர் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிசெல்வன் (22). இவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார்.

    அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 3 செல்போன்களை திருடிச் சென்றனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×