search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide attempt"

    • மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார்.
    • நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது டைல்ஸ் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். அவரது 2-வது மகளும் மனைவியுடன் சென்றுவிட்டார். இதனால் டைல்ஸ் வியாபாரி தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த டைல்ஸ் வியாபாரி தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று தனது மூத்த மகளை பைக்கில் அழைத்துக் கொண்டு கொல்கத்தா சயின்ஸ் சிட்டிக்கு சென்றார்.

    அங்குள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தினார். மகளை ரோட்டில் நிற்க வைத்துவிட்டு மேம்பாலத்தின் மீது ஏறி நின்று குதிக்க முயன்றார். அதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கூச்சலிட்டு அவரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் மேம்பாலத்தில் இருந்து இறங்கவில்லை.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேம்பாலத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த வியாபாரியிடம் தயவு செய்து கீழே இறங்குங்கள்.

    உங்கள் மகளின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் டைல்ஸ் வியாபாரி தற்கொலை முடிவை கைவிடவில்லை. தொடர்ந்து பாலத்தில் நின்று கொண்டே இருந்தார்.

    மேலும் அங்கிருந்த பொதுமக்களும் சத்தம் போட்டபடி அவரை தயவு செய்து குதிக்க வேண்டாம் என தெரிவித்தனர் .

    அந்நேரத்தில் தான் போலீசாருக்கு ஒரு யோசனை வந்தது. கொல்கத்தா சயின்ஸ் சிட்டி நகரில் பிரபல ஓட்டல் ஒன்றில் ருசியான பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.


    அது பற்றி டைல்ஸ் வியாபாரியிடம் கூறினர். தற்கொலை முடிவை கைவிட்டால் பிரபல ஓட்டலில் இருந்து பிரியாணி  வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

    இதனை கேட்டதும் வியாபாரி தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு கீழே இறங்கினார். உடனடியாக அவருக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்தனர்.

    அதனை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்தால் சயின்ஸ்சிட்டி மேம்பாலத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பெண் சிவில் நீதிபதி ஒருவர் சக மாவட்ட நீதிபதி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவர் பாரபங்கியில் பதவியில் இருந்தபோது மாவட்ட நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய 2 பக்க கடிதத்தில் "இனி எனக்கு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களில் நான் நடை பிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும் உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை. என் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லை. எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும், "என்று குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணை நிலுவையில் இருந்தபோது மாவட்ட நீதிபதியை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தான் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மாவட்ட நீதிபதிக்கு எதிராக எழுப்பிய பாலியல் புகார்கள் மீதான விசாரணையின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகத்திடம் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.

    • போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர்.
    • தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த வைராவிகுளத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 70).

    இவரது மகள் முருகம்மாள். இவர் மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்திருந்தார். அப்போது கூட்ட அரங்கில் வைத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து தலையில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து பாட்டிலை தட்டி விட்டனர். மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் அங்கு விரைந்து வந்து வள்ளியம்மை மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது வள்ளியம்மை கூறுகையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது அந்த தொகையை கேட்டு எனது நிலத்தில் நான் பயிர் வைப்பதற்கு அந்த நபர் இடையூறு செய்து வருகிறார்.

    எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்து இங்கு வந்தேன் என்று கூறினார்.

    • கள்ளக்காதலி வேறு ஒருவருடன் பழகியதால் வேதனை
    • 2 கைகளையும் அறுத்து கொண்டார்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வேன் டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து இளம்பெண் ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் இளம்பெண் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் வேன் டிரைவருக்கு தெரிய வரவே அவர் தனது கள்ளக்காதலியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேன் டிரைவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இளம்பெண் தன்னை ஏமாற்றி விட்டதாக பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்த நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேன் டிரைவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இளம்பெண் என்னுடைய மனைவி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். இனால் மனவேதனை அடைந்த வேன் டிரைவர் அவரது வலது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் ஆனைமலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை ஏமாற்றிய இளம்பெண் மீதும், நெல்லையை சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.

    இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்துள்ளது.
    • ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    கோவை,

    கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 9,241 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், இதில் 916 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் விஷம் குடித்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இறப்புகளுக்கான காரணத்தில், தற்கொலை 13-வது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை யால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவ னம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்ததுள்ளது.குறிப்பாக 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவ ர்கேள அதிகம் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்து ள்ளது.

    மன அழுத்தம், குற்றவு ணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதி சிக்கல்கள் உள்ளிட்டவை தற்கொ லைக்கு காரணங்களாக உள்ளன.

    கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் கடந்த ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை 5,113 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் 553 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கி ன்றன.இதில் 31 பேர் தூக்குப்போட்டும், 359 பேர் விஷம் குடித்து, தீக்காயத்தால் 106 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

    நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4,128 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 353 பேர் உயிரிழந்தனர்.

    இவர்களில் 7 பேர் தூக்கிட்டும், 248 பேர் விஷம் குடித்தும், 61 பேர் தீக்காயத்தாலும் இறந்துள்ளனர். புள்ளி விபரங்களின் படி விஷம் குடித்தே அதிகமனோர் இறந்துள்ளது தெரியவருகிறது.

    இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைக்கு ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களுக்கு மனநலத்துறையினர் கவுன்சிலிங் வழங்குகின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில், உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளன.

    விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்கு அவர்கள் எந்த வகையான விஷம் அருந்தினார்கள் என்பது அவர்களது உறவினர்களுக்கே தெரிவதில்லை.இதுதவிர பலர் விஷத்தை மதுவுடன் கலந்து அருந்து வதும் ஒரு காரணமாக உள்ளது.

    விஷம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், அது எத்தகைய விஷம் என்பது தெரியாததால், உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

    அனைத்து பரிசோதனை களையும் மேற்கொண்டு விஷத்தின் தன்மை கண்ட றிந்து, சிகிச்சை அளிக்கும் முன் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.

    இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். இதை கருத்தில் கொண்டே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் கடந்த 20 வருடங்களாக பெருந்துறை அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நடராஜன் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளரை சந்திக்க சென்றார். அப்போது பணி சம்பந்தமாக வணிக மேலாளர் நடராஜனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர் பெருந்துறை போக்குவரத்து கழக கிளை அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் அங்கு சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைப் பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை கிளை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 80 பேர் நள்ளிரவில் பணிமனை நுழைவு வாயில் பகுதியில் திரண்டர். இதை தொடர்ந்து அவர்கள் சக ஊழியரை அவமானப்படுத்தி அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் மருத்துவ செலவை அவரே ஏற்க வேண்டும். இல்லை என்றால் இன்று அதிகாலை முதல் பெருந்துறை கிளை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் மருத்துவச் செலவினை போக்குவரத்து கழகமே கவனித்து கொள்ளும் என்றும் கூறினர். இதை யடுத்து அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    • மாரி விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • 2 பேரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பன். இவரது மனைவி மாரி (வயது 33). இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    இந்நிலையில் மாரி நேற்று இரவு தனது மகள் பேச்சியம்மாளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.
    • 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் காம்பிளியாம்பட்டி அருகே உள்ள சின்னகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 29). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு வேணிஸ்ரீ (10), சுபஸ்ரீ (8), மதுமிதா (6), யோக ஸ்ரீ (4) ஆகிய 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் 4 பெண் குழந்தைகள் உள்ளதால் செல்வம் அவரது 4 வயது மகள் யோகஸ்ரீயை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதனை அறிந்த தனலட்சுமி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    பின்னர் அவர் தனது கணவர், குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வத்தை அழைத்து அவரை கண்டித்து அனுப்பினர்.

    போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தினமும் மது குடித்து விட்டு வந்தது தனலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டடார்.

    கணவரின் கொடுமையால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனலட்சுமி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி அவர் சம்பவத்தன்று அவரது 4 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தற்கொலை செய்வதற்காக வந்தார். அங்கு அவர் குழந்தைகளுடன் அழுது கொண்டு இருந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பருத்தியூரை சேர்ந்த சின்னாள் (65) என்பவர் பார்த்தார். பின்னர் அவர் தனலட்சுமியின் அருகே சென்று என்ன பிரச்சினை என கேட்டார். அதற்கு அவர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய வந்து இருப்பதாக கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து தனது ஆலய பாதிரியாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் அந்த பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் நிர்வாகிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்வதற்காக வந்த தனலட்சுமியை மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் இல்ல நிர்வாகி இது குறித்து ஆழியாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×