search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonam Kapoor"

    • நடிகை சோனம் கபூர் 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார்.
    • திருமணத்திற்கு பின்னரும் சோனம் கபூர் சில படங்களில் நடித்து வந்தார்.

    பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர் கடந்த 2007-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் 'சாவரியா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான அவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவை திருமணம் செய்தார்.



    பின்னர் இந்த ஜோடி லண்டனில் செட்டிலாகினர். திருமணத்திற்கு பின்னரும் சோனம் கபூர் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடிய அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தாலும் அவர்களுக்கு டெல்லியில் ரூ.173 கோடியில் பிரம்மாண்ட மாளிகை இருப்பது தெரிய வந்துள்ளது.


    பிருத்திவிராஜ் சாலையில் அமைந்துள்ள இந்த மாளிகையானது 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. சோனம் கபூர் தம்பதி இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் டெல்லியில் உள்ள இந்த வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிடுவார்களாம். இதற்காக இந்த மாளிகையில் பல்வேறு ஆடம்பர வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மாளிகையின் உட்புறத்தில் ஸ்டைலான மார்பிள் தரை, நேர்த்தியான மர தளவாடங்களால் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் என மாளிகை அதிநவீன வசதிகளுடன் ஜொலிக்கிறது. இந்த மாளிகையில் கூடைப் பந்து மைதானமும் உள்ளது.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு லண்டனில் விமர்சையாக நடைபெற்றுள்ளது.
    • தற்போது சோனம் கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகையும் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டார். சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார்.

    சோனம் கபூர்

    சோனம் கபூர்

     

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

     

    சோனம் கபூர்

    சோனம் கபூர்

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு, நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனம் கபூர், திருமணத்திற்கு பிறகு லண்டனில் வசித்து வருகிறார்.
    • சோனம் கபூரின் வளைகாப்பு லண்டனில் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகையும் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டார். சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

    சில நாட்களுக்கு முன் கர்ப்பம் தறித்த சோனம் கபூர் 'பேபிமூனுக்காக' இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சோனம் கபூர், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டனில் தனது வளைகாப்பு விழாவை கொண்டாடினார்.


    சோனம் கபூர்

    சோனம் கபூர்


    இதைத்தொடர்ந்து வளைகாப்புக்கு வந்த விருந்தினர்களுக்கு சோனம் கபூர், ஆனந்த் அஹூஜா தம்பதியினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசான கைக்குட்டையில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் அழகான பையில் செயின் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செயினில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா இந்தியில் அறிமுகமாகும் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு முதலில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். #ReginaCassandra
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்து வந்த ரெஜினா கசண்ட்ரா, ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

    இந்த படத்தில் ரெஜினா தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரகசியமாகவே வைத்து இருந்தார். படத்தின் டிரைலர் வெளியானபோது தான் சோனம் கபூரும், ரெஜினாவும் இதில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.



    ரெஜினாவின் இந்த துணிச்சலான முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அமைதியாக இருந்தார். தற்போது ரெஜினாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்.

    இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற ரீதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் ரெஜினாவை பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டுகள் ரெஜினாவை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முதன்மை கதாநாயகியாக நடிப்பதற்கு விருப்பப்பட்டு கதைகள் கேட்டு வருகிறார். #ReginaCassandra

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா, தற்போது இந்தி படத்தில் பெண் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். #Regina #SonamKapoor
    தமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது.

    அவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்தியில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா நடித்து உள்ளார்.

    இந்த படத்தின் கதைப்படி சோனம் கபூர் ஒரு லெஸ்பியன். அவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.



    இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி அந்த சஸ்பென்சை உடைத்துள்ளது. அதில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியை நிறுத்தி பார்க்கும் போது, சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. கலாச்சார மாற்றத்தின் சாட்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ள செய்தி பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. #Regina #SonamKapoor
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனம் கபூர், ட்விட்டரில் இருந்து வெளியேறியதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. #SonamKapoor
    இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் துல்கர் சல்மானுடன் ஜோயா பேக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் இருந்து வெளியேறும் தனது முடிவை அவர் அறிவித்துள்ளார். சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். டுவிட்டர் மிக எதிர்மறையாக உள்ளது.  அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும் என தனது ட்விட்டர் செய்தியில் சோனம் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டரில் இருந்து வெளியேறும் முடிவிற்கான குறிப்பிடத்தக்க சம்பவம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், மும்பையில் சுற்று சூழல் சீர்கேடு பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்த பதிவுக்கு எதிராக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவை அடுத்தே சோனம் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.



    அந்த ட்விட்டர் பதிவில் சோனம், நகரை அடைய எனக்கு 2 மணிநேரம் ஆனது. ஆனாலும் சேர வேண்டிய இடத்தினை அடையவில்லை. சாலைகள் மோசம் ஆக உள்ளன. சுற்று சூழல் சீர்கேடு அதிகம் உள்ளது. வீட்டை விட்டு வெளியே வருவது ஒரு கெட்ட கனவாக உள்ளது என பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் நபர் ஒருவர் சோனம் பதிவில், பொது போக்குவரத்து அல்லது குறைவான எரிபொருளை எடுத்து கொள்ளும் வாகனங்களை பயன்படுத்திடாத உங்களை போன்ற நபர்களாலேயே சுற்று சூழல் சீர்கேடு அளவு உயர்ந்து வருகிறது.



    லிட்டர் ஒன்றுக்கு 3 அல்லது 4 கி.மீ. அளவுக்கே மைலேஜ் தரும் உங்களுடைய ஆடம்பர கார், உங்களுடைய வீட்டில் உள்ள 10 அல்லது 20 ஏ.சி.க்கள் ஆகியவையே உலக வெப்பமயம் ஆவதற்கு பொறுப்பு என்பது உங்களுக்கே தெரியும். முதலில் உங்களால் ஏற்படும் சுற்று சூழல் சீர்கேட்டை கட்டுப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

    அந்த நபருக்கு சோனம் அளித்துள்ள பதில் பதிவில், உங்களை போன்ற நபர்களால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே பெண்கள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதற்கு கடினம் ஆக உள்ளது என தெரிவித்துள்ளார்.
    கர்வான் படத்தை தொடர்ந்து அபிஷேக் சர்மா இயக்கத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DulquerSalmaan #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் இர்பான்கான், மிதிலா பால்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில், மற்றுமொரு இந்தி படத்திலும் துல்கர் நடிக்க இருக்கிறார்.



    தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா அடுத்ததாக ஸோயா பேக்டர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சர்மான் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

    இந்த படம் விராட் கோலியின் முழுமையான வாழ்க்கை கதையாக இருக்காது என்றும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. #ZoyaFactor #DulquerSalmaan #ViratKohli

    சமீபத்தில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட சோனம் கபூர் அணிந்திருக்கும் மோதிரத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
    சோனம்கபூர் சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். விரைவில் கணவருக்கு சொந்தமான டெல்லியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் அமைந்துள்ள ஆடம்பர பங்களாவில் குடியேறப்போகிறார். 

    இந்த வீட்டின் மதிப்பு ரூ.173 கோடி என்கின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடைய வீட்டின் மதிப்பு ரூ.160 கோடிதான். தொழில் அதிபரை மணந்துள்ள இன்னொரு நடிகையான ஷில்பா ஷெட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டிலும், கங்கனா ரணாவத் ரூ.30 கோடி மதிப்பு கொண்ட வீட்டிலும் வசிக்கின்றனர். சோனம்கபூர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள். 

    இந்த நிலையில் கூடுதல் தகவலாக சோனம் கபூர் ரூ.90 லட்சம் மதிப்புள்ள மோதிரம் அணிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு பிற இந்தி நடிகைகள் பொறாமையால் வாய்பிளந்து நிற்கின்றனர். இரு வாரங்களுக்கு முன்புதான் சோனம் கபூருக்கு திருமணம் நடந்தது. அப்போது கணவர் ஆனந்த் அஹுஜா இந்த விலை உயர்ந்த மோதிரத்தை அவரது கைவிரலில் அணிவித்தார் என்கின்றனர்.
    ×