search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonakshi Sinha"

    • இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
    • பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி

    ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.

    இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.

    அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

    சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #SonakshiSinha
    சமூக வலை தளங்களில் நடிகைகள் அவர்களது உடலமைப்பு குறித்து தொடர்ந்து மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். சில நடிகைகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றனர். சிலர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர்.

    தற்போது நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். சோனாக்‌ஷி குண்டாக இருப்பதாக தொடக்கத்தில் விமர்சனங்களை சந்தித்தவர். ‘உங்களுக்குப் பிடித்தால் என்னைப் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். விமர்சனங்கள் என்னை மெருகேற்ற உதவுகின்றன. அவற்றை மகிழ்ச்சியுடன் படிக்கிறேன். ஆனால், வீட்டில் சண்டை போட்டு வந்த கோபத்தில் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலோ, என்னை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று விமர்சனங்களை வைத்தாலோ ஏற்றுக்கொள்ள மாட்டேன்.



    உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர வேண்டும், கருத்துகளைப் பதிவிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சோனாக்‌ஷி கதாநாயகியாக நடித்திருந்தார்.
    பிரபல நடிகர்களான பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சல்மான் கான், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் மீது தனியார் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது.
    நடிகர்கள் சல்மான்கான், அக்‌ஷய்குமார், ரன்வீர்சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் ஆகியோர் கலை நிகழ்ச்சி நடத்த பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகர கோர்ட்டில் தனியார் நிறுவனம் ஒன்று நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    “அமெரிக்காவில் 100 ஆண்டு இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம். அதில் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த சல்மான்கான், பிரபுதேவா, அக்‌ஷய்குமார், ரன்வீர் சிங், நடிகைகள் சோனாக்சி சின்ஹா, கத்ரினாகைப் ஆகியோரை அழைத்து இருந்தோம்.

    இதற்காக சல்மான்கானுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் முன்பணமாக வழங்கப்பட்டது. கத்ரினா கைப்புக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலரும், சோனாக்சி சின்ஹாவுக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலரும் கொடுத்தோம். மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சல்மான்கான் ஒரு வழக்கு காரணமாக அமெரிக்கா வர இயலாது என்று கூறியதால் நிகழ்ச்சியை இன்னொரு நாளில் நடத்த தள்ளி வைத்தோம்.



    இதுவரை நிகழ்ச்சியை நடத்தி கொடுக்க அவர்கள் முன்வரவில்லை. அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்குவதற்காக பல தடவை தொடர்பு கொண்டும் அவர்களோடு பேசமுடியவில்லை. இன்னொரு கலை நிகழ்ச்சிக்காக அந்த நடிகர்-நடிகைகள், அமெரிக்கா வர இருப்பதாக கேள்விப்பட்டோம். எங்களை ஏமாற்றியதால் அவர்கள் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும்”.

    இவ்வாறு மனுவில் குறிப்படப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ×