search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sandeep Lamichhane"

    • 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
    • கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன். சுழற்பந்து வீரரான அவர் 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

    கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் மீதான தண்டனை விவரம் வருகிற 10-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    • கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பெற்றிருந்தார்.
    • காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.

    ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

    கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இவர் இடம் பெற்றார். 2018-ம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019-ம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. 

    • சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.
    • கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

    நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

    கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்தது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்று அவர் கூறி இருந்தார். விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறி இருந்தார்.



     இதனையடுத்து நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதன் பின், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் உடனடியாக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடும் உலக லெவன் அணியில் நேபாளத்தின் இளம் வீரரான சந்தீப் லாமிச்சான் இடம்பிடித்துள்ளார். #ICCWXIvWI
    இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்த்து உலக லெவன் அணி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வரும் 31-ந்தேதி நடக்கிறது. இதற்கான 11 பேர் கொண்ட உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேபாளத்தின் இளம் வீரரான சந்தீப் லாமிச்சான் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளார்.



    வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சொந்த விஷயத்திற்காக அணியில் இருந்து விலகியுள்ளார்.

    கடந்த வரும் வெஸ்ட் இண்டீஸை இரண்டு புயல்கள் தாக்கின. இதில் கிரிக்கெட் மைதானங்கள் சேதமடைந்தன. இதற்கு நிதி திரட்டவே இந்த டி20 போட்டி நடத்தப்படுகிறது.
    டெல்லி அணி தோற்றாலும், அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பிடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் தெரிவித்துள்ளார். #IPL2018
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக 17 வயதே அணி வங்காள தேசத்தின் சந்தீப் லாமிச்சேன் விளையாடினார். இவருக்கு இதுதான் முதல் போட்டி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. சந்தீப் லாமிச்சேன் முதல் ஓவரை வீசினார். நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆனால், நான் அறிமுக போட்டியிலே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் இதுவரை முதல் ஓவரை வீசியது கிடையாது. ஆகவே, இந்த போட்டியில் பந்து வீசியது த்ரில்லாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஜாம்பவான் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிக்கு எதிராக வீசும்போது. இது எனக்கும், நேபாளம் அணிக்கும் மிகப்பெரிய தருணம்’’ என்றார்.
    ×