search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது- நேபாள இளம் வீரர் சொல்கிறார்
    X

    அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது- நேபாள இளம் வீரர் சொல்கிறார்

    டெல்லி அணி தோற்றாலும், அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பிடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் தெரிவித்துள்ளார். #IPL2018
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக 17 வயதே அணி வங்காள தேசத்தின் சந்தீப் லாமிச்சேன் விளையாடினார். இவருக்கு இதுதான் முதல் போட்டி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. சந்தீப் லாமிச்சேன் முதல் ஓவரை வீசினார். நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆனால், நான் அறிமுக போட்டியிலே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் இதுவரை முதல் ஓவரை வீசியது கிடையாது. ஆகவே, இந்த போட்டியில் பந்து வீசியது த்ரில்லாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஜாம்பவான் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிக்கு எதிராக வீசும்போது. இது எனக்கும், நேபாளம் அணிக்கும் மிகப்பெரிய தருணம்’’ என்றார்.
    Next Story
    ×