search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajinikanth politics"

    நடிகர் ரஜினிகாந்த் கட்சியில் மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியை மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். ஏற்கனவே நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.

    ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக இளவரசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை சேர்த்தும் வருகிறா£ர்.

    நிர்வாகிகள் மீது புகார் வந்தால் அவர்கள் உடனடியாக நீக்கப்படுகின்றனர். கடந்த மாதம் பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சாய்வர்சன், புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பூக்கடை ரவி, விழுப்புரம் மாவட்ட நகர செயலாளர் கலைநேசன், விழுப்புரம் மாவட்ட இணை செயலாளர் மதிராஜன், துணை செயலாளர்கள் ரஜினி முருகன், சரணவன், டான்போஸ்கோ, தகவல் தொழில்நுட்ப செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி செயலாளர் தினேஷ், வழக்கறிஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், பண்ருட்டி நகர துணை செயலாளர்கள் ரமேஷ், வெங்கடேசன், வினோத், கரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜவஹர், திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதி துணைச் செயலாளர்கள் அமுல்ராஜ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நீக்கப்பட்டனர்.


    இந்த நிலையில் தற்போது மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியும் கலைக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் அணி செயலாளர் காயத்ரி துரைசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் சாமுவேல் சர்ச்சில் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    காயத்ரி துரைசாமி தற்போது தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், சாமுவேல் சர்ச்சில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மாநில மகளிர் அணி செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகிய 2 பதவிகள் கலைக்கப்பட்டுவிட்டன.

    அதே நேரத்தில் தற்போது மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அமைப்பு செயலாளரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான இளவரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்பு பணிகள், இனி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணி பற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற்று அவர்களின் அறிவுரைபடி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மாநில இளைஞர் அணி நிர்வாகிகளும், மாநில மகளிர் அணி நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாவட்ட செயலாளர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கட்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகிகள் இனி நேரடியாக தலைமைக்கு அனுப்ப முடியாது. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கீழ் உள்ளனர். அதே போல் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே சில வாரங்களில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நம்புகிறார்கள். இது நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சிவபன்னீர் செல்வன், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பி.ஆல்வினுக்கு பொன்னாடை போர்த்தி மன்றத்தில் இணைந்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். ரஜினி நற்பணி மன்றத்தின் முன்னாள் இளைஞரணி தலைவர் கலுங்கடி சதீஷ்பாபு, சிவபன்னீர் செல்வனுக்கு சால்வை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மன்ற ஆலோசகர் கனகசபாபதி, நகர செயலாளர் செல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் பழனி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், குழித்துறை நகர செயலாளர் சந்தோஷ்குமார், தயாபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘மாற்று கட்சியை சேர்ந்த பலர் ரஜினி மன்றத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாற்றத்தை விரும்பி அவர்கள் விரைவில் இணைவார்கள் என்றும்‘ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் தெரிவித்தார். 
    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீரென மாவட்டந்தோறும் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அரசியலில் ஈடுபட போவதாக முன்னணி நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அறிவித்தனர்.

    ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியிட்டதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    ரஜினி உடனடியாக தனது கட்சிப் பெயர், கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் விபரத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கட்சி தொடங்கும் வி‌ஷயத்தில் அவர் அவசரம் காட்டவில்லை. கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” என்று தனது கட்சிப் பெயரை அறிவித்த பிறகும் கூட ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் மிக, மிக நிதானமாகவே உள்ளன.

    கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரை தனது கட்சிக்கு ஆழமான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று ரஜினி முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கிய போது அவர் அரசியலில் சாதனைகள் படைக்க அவரது ரசிகர் மன்றங்கள்தான் முக்கிய பங்களிப்பு கொடுத்தன. அதே பாணியை ரஜினியும் கடை பிடித்துள்ளார்.

    ரஜினிக்கு தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் சுமார் 60 ஆயிரம் உள்ளன. அவை அனைத்தும் “ரஜினி மக்கள் மன்றம்“ என்று மாற்றம் செய்யப்பட்டன.

    ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த 6 மாதமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு கிளை அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் விபரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி, மகளிர் அணி, வக்கீல்கள் அணி, விவசாய அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்தக் கட்டமாக புதிய நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு குறைந்தபட்சம் 1 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி அறிவுறுத்தி இருக்கிறாராம்.

    அடுத்தக் கட்டமாக மற்றொரு பணியையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஓசையின்றி செய்து வருகிறார்கள். பூத் கமிட்டிக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஓட்டுப்பதிவு தினத்தன்று பூத் கமிட்டி தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் ரஜினி ரசிகர்களின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.


    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அடுத்தக்கட்ட அதிரடியைத் தொடங்கியுள்ளனர். அதன்படி மாவட்டந்தோறும் ‘திடீர்’ ஆலோசனையை நடத்தி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி விவாதித்தனர். மேலும் பொதுமக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்சினைகளை, நீண்ட கால கோரிக்கைகளை கையில் எடுத்து செயல்பட்டால்தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்ற முடிவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன உள்ளன என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வின் அடிப்படையில் முக்கிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு அதற்கு ஏற்ப ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செயல்பட வியூகம் வகுத்துள்ளனர். ரஜினி விரைவில் மாநில அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, பிறகு கட்சி பெயரை அறிவிக்க உள்ளார்.

    அந்த சமயத்தில் தங்கள் பகுதியில் தனி செல்வாக்குடன் இருக்கும் வகையில் செயல்பட ரஜினி மக்கள் மன்றத்தினர் தீவிரமாகியுள்ளனர்.

    இதற்கிடையே ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தாமதம் செய்வது, மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘காலா’ படத்துக்கு பிறகு அவர் தீவிர அரசியலுக்கு வந்து செயல்பட தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ‘காலா’ படம் வெளியான பிறகு மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் ஆனதால், அவரது தீவிர அரசியல் பணிகள் தள்ளிப்போனது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி எப்போது கட்சிப் பெயரை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் மங்கத் தொடங்கியது.


    ஸ்டெர்லைட் பிரச்சினையில் வெளியிட்ட கருத்தும், ‘காலா’ பட தோல்வியும் ரஜினி மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது. எனவே இனி அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் அடுத்த இலக்கை சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஆகையால் அவர் தீவிர அரசியலை விரைவில் கையில் எடுக்க உள்ளார்.

    தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் ரஜினி தங்கி இருக்கிறார். அந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ரஜினி இந்த மாத இறுதியில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி டார்ஜிலிங்கில் இருந்தாலும் மக்கள் மன்ற பணிகளை உடனுக்கு உடன் தெரிந்து கொண்டு வருகிறார். ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிக்கு இது தொடர்பான தகவல்களை கொடுத்துவருகிறார்.

    சென்னை திரும்பிய உடன் மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார். ஏற்கனவே அவர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் பொறுப்பாளர்களை சந்தித்து பேசிவிட்டார். இன்னும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. அதற்கு சுமார் 4 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்பதால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அந்த கூட்டத்தை நடத்த முடியாது. எனவே வேறு இடம் பார்த்து வருகிறார்கள். அனேகமாக சென்னையிலேயே இந்த கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

    வரும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளாகும். அன்று ரஜினி தனது புதிய அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தினரை வைத்து கோவையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். மாநாடு வேலைகள் ரகசியமாக நடந்து வருகின்றன.
    நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதால் புதிய கட்சி தொடங்குவதில் தீவிரமாகி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    ரஜினி உண்மையிலேயே அரசியல் களத்துக்குள் வந்து விட்டாரா? அல்லது காலா படத்துக்காக பாவ்லா காட்டுகிறாரா? என்பது போன்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் கொட்டி கிடக்கின்றன.

    புதுக்கட்சியை தொடங்காமலேயே அரசியல்வாதியாகிவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது இது போன்று ஏகப்பட்ட விமர்சனங்கள். குறிப்பாக தமிழக அமைச்சர்கள் ஆளாளுக்கு ரஜினியை வசைபாடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ரஜினி தனது அரசியல் பாதையை வகுத்து பயணிக்க தொடங்கி விட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

    இதனையெல்லாம் மனதில் வைத்துதான் காலா படப்பாடல் வெளியீட்டு விழாவில் யார் என்ன சொன்னாலும் நான் பின் வாங்கமாட்டேன் என்று எங்கள் தலைவர் பேசினார் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

    மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் கடந்த 4 மாதங்களாக நடந்து முடிந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் அசுர வேகத்தில் நடக்கிறது. கட்சியை தொடங்க வேண்டியது மட்டும்தான் பாக்கி என்பதும் ரஜினி மக்கள் மன்றத்தினரின் குரலாக ஒலிக்கிறது.


    கடந்த டிசம்பர் மாதம் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி அதன் பின்னர் 2 மாதங்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். அதற்குள் கமல் புதிய கட்சியை தொடங்கி ஊர் ஊராக செல்ல தொடங்கிவிட்டார். இதனால் என்னாச்சி ரஜினிக்கு? எதுவுமே பேசாமல் இருக்கிறாரே? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

    இதற்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரஜினி தனது பேச்சில் புலிப்பாய்ச்சலை வெளிப்படுத்தினார்.

    நான் அரசியலுக்கு வந்துள்ளதை பலர் ஏளனம் செய்கிறார்கள். என்னாலும் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தர முடியும் என்று பொங்கினார்.

    இதன் பின்னர் அவரது இமயமலை பயணமும் அப்போது அரசியல் பேசாமல் தவிர்த்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 9-ந்தேதி நடந்த காலா விழா ரஜினியின் அரசியல் வேகத்துக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துள்ளது என்றே கூறலாம்.


    அந்த விழாவில் ரஜினி கூறிய தவளை கதை, தன்னை தினமும் விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரஜினியை பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவை எதற்குமே ரஜினி பதில் கூறுவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களுக்காகவே தவளை கதையை கூறி தெளிவு படுத்தியுள்ளார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 3 தவளைகள் மலை ஏறும் போது, சுற்றி நிற்பவர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் ஏறமுடியாது என்று கூறியதையும் தாண்டி ஒரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

    ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்கவில்லை. இப்படி நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும் என்றே ரஜினி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் ஆலோசனைக்கு பின்னர் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ள ரஜினி பெண்களின் ஓட்டுகளை கவரவும் திட்டமிட்டுள்ளார்.

    இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்களில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்க உள்ள ரஜினி தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உள்ளார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலை ஆகியவை ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே வந்துள்ளதாக கூறும் ரஜினி, அதற்காக நகர்த்தி வரும் காய்கள் வெற்றிக் கோட்டை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். #Rajinikanth #RajiniMakkalMandram
    ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை ரஜினிகாந்த் நேற்று சந்தித்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி மாவட்ட இளைஞரணி செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



    இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்களை வருகிற 13-ஆம் தேதி சந்தித்து ரஜினிகாந்த்  ஆலோசனை நடத்த இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கும இந்த சந்திப்பில் தமிழக - புதுச்சேரி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். #Rajinikanth #RajiniMakkalMandram

    ×