search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pregnancy Period"

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.

    முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும்.

    இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

    இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

    பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.

    எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

    மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.

    இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
    உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
    புகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

    கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.
    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது.
    பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது எத்தனை நாட்கள் பெண்ணின் கருப்பைக்குள் உயிர்வாழும் என்பதை பொறுத்துதான் பெண்கள் கர்ப்பமடைவது உறுதிசெய்யப்படுகிறது. விந்தணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் முக்கியமானது. அது எந்த இடத்தில வெளிப்படுகிறது என்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் மாறுபடும்.

    உதாரணத்திற்கு ஆண்கள் சுயஇன்பம் காணும்போது வெளிப்படும் உயிரணுக்கள் வெளியேறிய உடனே இறந்து விடும். உயிரணுக்கள் பெண்களின் உடலுக்குள் சென்றாலும் கூட அவற்றின் ஆயுட்காலம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று. இந்த பதிவில் உயிரணுக்களை பெண்கள் உடலில் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

    ஒரு பெண் கர்ப்பமடைய ஒரே ஒரு உயிரணு போதும். கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்போது அதில் எத்தனை உயிரணுக்கள் பெண்களின் கருமுட்டையை சென்று அடைகிறதோ அதனை பொறுத்தே கர்ப்பமும், குழந்தைகளின் எண்ணிக்கையும் இருக்கும். ஒவ்வொரு முறையும் உயிரணுக்கள் வெளியேறும்போது அதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் உயிரணுக்கள் வெளியேறுகிறது. இந்த கோடிக்கணக்கான உயிரணுக்களில் இருந்து ஆரோக்கியமான ஒன்றோ அல்லது இரண்டு உயிரணுக்கள் தான் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக பாலோப்பியன் குழாயை கடந்து பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருவாக உருவாகிறது.

    புகைப்பழக்கத்தை தவிர்த்தல் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது உங்களுடைய உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க கூடும். மேலும் அளவாக மது அருந்துவது, சத்தான உணவுகளை சாப்பிட்டு எடையை சீராக பராமரிப்பது, இறுக்கமான உடைகளை அணியாமல் இருப்பது போன்றவை உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்கும்.



    உயிரணுக்கள் பெண்ணுறுப்புக்குள் சென்ற பிறகு 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வாய் உயிருடன் இருக்கும். பல அணுக்கள் ஆரம்ப நிலையிலேயே இறந்துவிடும். மீதமுள்ள உயிரணுக்களில் ஒன்றே கர்ப்பம் உண்டாக்கும் ஆற்றல் உடையதாக உள்ளது.

    இது கருப்பைக்குள் போதுமான அளவு வெப்பமும், திரவமும் உள்ளபோது நடக்க கூடியது. சொல்லப்போனால் கர்ப்பப்பை திரவம் கருமுட்டை உற்பத்தியாவதற்கான அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் உயிரணுக்கள் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.

    வெளிப்புறம் என்று வரும்போது உயிரணுக்களின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவுதான். மனித உடலில் உள்ள வெப்பநிலை இல்லாத இடங்களில் உயிரணுக்களால் நீண்ட நேரம் உயிருடன் இருக்க இயலாது. அவை வெளியே வந்தவுடனேயே இறந்துவிடும். இல்லையெனில் சூழ்நிலை மற்றும் இடத்தை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கும்.

    பெண்களின் உடலில் உயிரணுக்களின் ஆயுளை அதிகரிப்பது என்பது இயலாது என்று. அதற்கு பதிலாக ஆண்கள் தங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க முயலலாம். ஆரோக்கியமான உயிரணுவிற்கு ஆயுள் அதிகம். உயிரணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்வருவனற்றை முயற்சி செய்து பார்க்கவும்.

    இயற்கை மூலிகையான அஸ்வகந்தா உயிரணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடியது. ஆய்வுகளின் படி இது உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உயிரணுவின் உற்பத்தி மட்டுமின்றி அவற்றின் தரமும் உயர்வதை காண்பீர்கள்.

    லேப்டாப்பை உங்கள் மடியில் வைத்து உபயோகிப்பதை தவிருங்கள். அதிலும் வைபை இயக்கத்தில் உள்ள லேப்டாப் உங்கள் மடியில் இருக்கும்போது அதிக ரேடியோ அலைகளால் உங்கள் உயிரணுக்கள் வெகுவாக பாதிக்கப்படும். அதேபோல உங்கள் செல்போனையும் பேண்ட் பக்கத்திற்குள் வைப்பதை தவிருங்கள்.

    உயிரணுக்களை பொறுத்த வரையில் சூடான நீரை காட்டிலும், குளிர்ந்த நீர் குளியல் அதிக நன்மையை வழங்கக்கூடியது. குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை வழங்குவது மட்டுமின்றி உங்களுடைய உயிரணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.

    கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.
    ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. பெண்கள் இதுபோன்று தடையேதுமின்றி உறவு கொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.

    பெண்மைத்தன்மை குறைவதற்கான அறிகுறிகள்

    பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும்.  எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

    முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.

    சில சமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்றுவிடும்.

    முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.

    ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.
    ×