search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரை ஜன்னலில் கையை கட்டி விட்டு அவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் எதற்காக தாக்கப்பட்டார்? கையை கட்டி யார் தாக்கினார்கள்? என தெரியவில்லை.

    இணையத்தில் பரவி வரும் வீடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    • பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
    • கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    • கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
    • தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
    • அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப் பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு இவர்கள் பல்வேறு வழிகளில் உதவிகளை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவரிடம் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    திருவள்ளூரை சேர்ந்த அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. கவுன்சிலரான ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

    அந்த அடிப்படையிலேயே தே.மு.தி.க. நிர்வாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கும் தொடர்பு இருந்தால் அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தே.மு.தி.க. நிர்வாகியுடன் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவர்களில் வக்கீல் ஒருவரும் உள்ளார். இவர்களை தவிர, மேலும் பலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பெண் தாதா அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் கூட்டாக சதி செய்து ஆம்ஸ்ட்ராங்கை கொன்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

    ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழி தீர்த்த அவரது தம்பி பொன்னை பாலு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஓராண்டாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மலர்க்கொடியும் தனது கணவர் தோட்டம் சேகர் கொலையுண்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கும் ஒரு காரணம் என்று எண்ணி இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஆயுள் கைதியான வடசென்னை தாதாவும் ஆம்ஸ்ட்ராங் மீது கண் வைத்திருந்துள்ளார். இப்படி 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திரைமறைவில் திட்டம் தீட்டி வந்த நிலையில் ஆற்காடு சுரேசின் கொலையால் நிலை குலைந்து போயிருந்த பெண் தாதா அஞ்சலையும் அவர்களோடு கை கோர்த்து செயல்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் நாலா புறமும் உள்ள ரவுடிகளால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் போலீஸ் விசாரணை விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல அரசியல் பிரமுகர்களும், ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது.
    • போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கோவில்குளம் சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (வயது 34). இவர்களுக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாரிமுத்து வேலைக்கு சென்றுவிட்டார். பார்வதி வீட்டை பூட்டி விட்டு தனது மகனை அழைத்துக்கொண்டு வயல் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது.

    அதில் இருந்த துணி மணிகள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து நகையை திருடிச்சென்றதை அறிந்த பார்வதி, உடனடியாக அம்பை போலீசில் தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லாததால் அம்பை- ஆலங்குளம் சாலையில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் கவின் தசூர். இவருக்கு வயது 29. கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கவின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லாரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லாரி டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் விசாரணை குறித்து குற்றம்சாட்டிய குடும்பத்தினர், லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனிடையே, ஜூலை 29 ஆம் தேதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    • இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக தம்மிகா நிரோஷனா இருந்தார்.
    • இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இலங்கை அணியின் முன்னாள் வீரரான தம்மிகா நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக அவரை நேற்று இரவு அவது வீட்டில் வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷனாவை கொலை செய்தவர் 12 ரக போர் துப்பாக்கியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கைதான மாணவர்கள் மொபைலில் ஆபாச படம் பார்த்து, அதே போன்ற செயலில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 7-ந்தேதி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். சிறுமி இச்சம்பவத்தை வெளியே கூறிவிடுவாள் என்று பயந்து சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

    பிறகு, சிறுமியின் உடலை கால்வாயில் மறைத்து வைத்தனர். சிறுமி உயிரிழந்ததால் பதற்றம் அடைந்த மாணவர்கள் தங்களது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து மாணவரின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு உயிரிழந்த சிறுமியின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் சென்றனர்.

    அங்கு வைத்து, சிறுமியின் உடலில் கல்லை கட்டி சடலத்தில் நதியில் வீசியுள்ளனர். இன்னும் சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    "குற்றச்சாட்டில் ஈடுபட்டபவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டிரோன், தண்ணீரில் இயங்கும் கேமரா, தேசிய பேரிடர் மீட்பு படை உதவியோடு சிறுமி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உடல் கிடைக்கும் வரை தேடும் பணிகள் தொடரும்," என்று எஸ்பி ஆதிராஜ் சிங் ரானா தெரிவித்தார்.

    முன்னதாக, கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா தெரிவித்தார்.

    • பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற பழமொழிக்கு, சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும் என்பது அர்த்தமாகும். இன்றைய காலத்தில் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் கோபம் கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகிறது.

    அதுபோல சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. நிலம் தொடர்பான குடும்ப தகராறு ஒன்று உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் உள்ள கைர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. மகனுக்கும், தாயுக்கும் தகராறு தொடர்பாக போலீசில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினரையும் போலீசார் வரவழைத்துள்ளனர்.

    அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சம்பவத்தை பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் பலியான பெண் ஹேமலதா என்றும் கைது செய்யப்பட்ட அவரது மகனான கவுரவுக்கு 22 வயதாகிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
    • விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வல்லம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 6 பக்தர்கள் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி, கண்ணுக்குடிபட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். பாதயாத்திரையாக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

    இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி (வயது 60), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனா, கார்த்திக் மனைவி மீனா (26) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், செல்வராஜ் மனைவி தனலட்சுமி (30), சங்கீதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா உள்ளிட்ட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சங்கீதா, தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது.
    • குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை?

    சென்னை :

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த அன்புத்தம்பி பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் தம்பியின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு தம்பி பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் இலட்சணமா? வெட்கக்கேடு! இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப்பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக்கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை? குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?

    ஏற்கனவே, கன்னியாகுமரியில் எனது ஆருயிர் தம்பி சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது தம்பி பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன். தம்பி பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.

    இத்தோடு, தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து இக்கொடுந்துயரில் பங்கெடுக்கிறேன்.

    தம்பி பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    • 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆகும் நிலையில், மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×