என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, 2 மர்ம நபர்களும் பணம் கேட்டு மிரட்டினார்கள்.
    • பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். இதையடுத்து 3 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தான் எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கி இருப்பதாகவும், தங்கியுள்ள இடத்தின் முகவரியை அனுப்பி அங்கு வர சொன்னார். இதனால் அந்த பெண் அங்கு சென்றார். அந்த பெண்ணின் தோழி வீடு தொட்ட நகரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் உள்ளது. அப்பெண் தனது தோழியின் வீட்டிற்கு அந்த வாலிபரை அழைத்துச் சென்றார்.

    அந்த பெண் தனது தோழியின் வீட்டில் இருந்தபோது திடீரென 2 ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். இதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் காவல்துறையை அணுக வேண்டாம் என மிரட்டி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, 2 மர்ம நபர்களும் பணம் கேட்டு மிரட்டினார்கள். பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தோழியின் கணக்கிலிருந்து ரூ.12,000 மற்றும் அவரது சொந்த கணக்கிலிருந்து ரூ.8,000 என ரூ.20 ஆயிரம் பணத்தை மர்மநபர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். மர்மநபர்கள் அந்த பணத்தை ஒரு பந்தய செயலி கணக்கில் டெபாசிட் செய்தனர்.

    மேலும் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் 2 செல்போன்கள், வாஷிங் மெஷின், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண் பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார். சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை பரப்பன அக்ரஹாரா போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் ரகு என்கிற அப்பு (24), கெஞ்சே கவுடா (26), மாதேஷ் (27) மற்றும் சஷிகுமார் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அந்த பெண்ணின் நண்பருக்கு நன்கு அறிமுகமானவர்கள். இந்த செயல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.

    அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
    • ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் கடந்த 27-ந்தேதி நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் 2 அறைகளை பதிவு செய்து தங்கினார்கள். அப்போது இருவரும் விடுதி அருகில் வைத்து நன்றாக மது அருந்தி உள்ளனர்.

    அப்போது பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் இளம்பெண்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் அனைவரும் விடுதி அறையிலேயே படுத்து தூங்கி உள்ளனர்.

    வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும் போதையில் தள்ளாடிய படியே மது மயக்கத்தில் தூங்கி உள்ளார்.

    நீண்ட நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது ஆடைகள் கலைந்திருந்தன. அலங்கோலமான நிலையில் அவர் காட்சி அளித்துள்ளார். இதன் பிறகே அவர் மதுபோதையில் ஆண் நண்பரின் அறையில் சென்று தூங்கியது தெரியவந்தது. அருகில் பெண் தோழியின் ஆண் நண்பர் படுத்திருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த ஆண் நண்பர் தான் மதுபோதையில் வேலூர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வேலூர் பெண் தனது தோழியான பெரம்பூர் இளம்பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

    அங்கு தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

    இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஆண் நண்பர்களோடு தூங்கியதில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

    • ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பல லட்சத்தை இழந்ததாக தெரிகிறது.
    • ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. இதில் பல லட்சத்தை அவர் இழந்ததாக தெரிகிறது.

    இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கிஷோர் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    நாகர்கோவில்:

    கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

    இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பின்னர் ஜெமலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தனர். நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் ஜெமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக அவரது பெற்றோருக்கு நிதின் ராஜ் உறவினர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜெமலாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளுக்கும் நிதின் ராஜிக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணமும், 50 பவுன் நகையும், வீட்டுக்கு தேவையான பொருட்களும் கொடுத்தோம். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.

    எனது மகளை கணவர், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை ரெடி செய்து தருமாறு கூறினார். நான் எனது செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சமாதானம் செய்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றும் வாங்கி கொடுத்தோம்.

    எனது மகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெமலாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெமலா சாவு குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது கணவர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த 28-ந்தேதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    • தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார்.
    • புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    அதன்படி நேற்றிரவு தீபன்ராஜ் அந்த பெண்ணை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து காதலனின் பேச்சை கேட்டு அவரும் இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளார். தீபன்ராஜ் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அருகில் உள்ள சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தீபன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பெண்ணுடன் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டு அங்கிருந்து தப்பினர்.

    தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் அந்த பெண் மேலவளவு போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து அந்த புகார் மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    • போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.

    சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகி விடுவான்.

    அந்த வகையில், தான் முதலாளி திட்டியதால் அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

    டெல்லியின் லஜ்பத் நகரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் குல்தீப் சேவானி. இவர் தனது மனைவி ருச்சிகா மற்றும் 14 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். கிருஷ்

    குல்தீப் சேவானியிடம் பீகாரைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் முகேஷை, குல்தீப் சேவானியின் மனைவி ருச்சிகா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், குல்தீப் சேவானி இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    குல்தீப், இரவு வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்துள்ளார். ஆனால் வீட்டின் கதவை யாரும் திறக்காததால், மனைவியும், மகனையும் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே கேட் அருகிலும், படிக்கட்டுகளிலும் ரத்தக்கறைகளை கண்ட குல்தீப், பதற்றம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ருச்சிகா படுக்கை அறையின் தரையிலும், மகன், குளியறையிலும் உயிரற்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற முகேஷை கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், குல்தீப் சேவானியின் மனைவி திட்டியதால் அவரையும் அவரது மகனையும் கொலை செய்ததை முகேஷ் ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
    • கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது.

    இக்கிராமத்தில் வசித்து வருபவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    இதற்காக கேசரி வர்மன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அவர் தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த சுமார் 200 பவுன் நகைகளை எடுத்து பீரோவில் வைத்திருந்தார்.

    தனது மகள் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைப்பதற்காக கேசரி வர்மன் தனது மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் முனியன், பொன்னம்மாள் மற்றும் கேசரி வர்மன் உறவினர்களை ஒரு அறையில் கட்டிப் போட்டனர்.

    பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோ மற்றும் பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகைளை கொள்ளையடித்து சென்றனர்.

    வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இன்று காலை மீட்டனர். இந்த கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
    • விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

        மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ். கேபிள் தொழில் செய்து வருகிறார்.

    இவரது மகன் அமரேஷ் (வயது 13). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

    அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான அமரேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
    • கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.
    • அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    செஞ்சி:

    விழுப்புரம் அடுத்த வி. கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன் (வயது 37). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெனித்தா (வயது 33) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 குழந்தைகள் உள்ளனர். பெனித்தா செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் அவர்கள் கிருஷ்ணா புரத்தி லேயே குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உள்ள ராமச்சந்திரன் கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்து வந்தாராம்.

    இந்நிலையில் இன்று பணிக்கு திரும்புவதற்காக நேற்று இரவு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அக்காள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்ள முருங்கை மரத்தில் ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து செஞ்சி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். செஞ்சி டி.எஸ்.பி. மனோகரன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    • லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

    இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×