search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Photograph"

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது.
    • சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி குறுந்தகவல் வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேர்ந்த ஒரு தனியார் வங்கி உதவி மேலாளர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

    எனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும் கிரடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.

    அதன்படி நானும் மொபைலில் பதிவிறக்கம் செய்தேன்.

    இதை எடுத்து எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிக்கு நான் அந்த செயலில் கூறப்பட்டுள்ள மாதிரி அக்சஸ் செய்து கொண்டேன்.

    பின்னர் உங்களுக்கு லோன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் நான் அந்த கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறி விட்டேன்‌‌.

    சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9000 வரவு வைக்கப்பட்டது.

    இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

    இருந்தாலும் நான் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

    சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது.

    மேலும் மார்பிங் செய்யப்பட்ட எனது போட்டோவை எனது உறவினர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

    ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந்தேன். எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×