search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pennagaram"

    அரசு டவுன் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி, பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ரங்காபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சத்தியநாராயணன் (வயது 20).

    அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரவிச்சந்திரன் (25). இவர்கள் 2 பேரும் பென்னாகரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ரங்காபுரம் அருகே வந்தபோது பாலக்கோட்டில் இருந்து பென்னாகரம் சென்ற அரசு டவுன் பஸ் மீது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த சத்திய நாராயணன் பெயிண்டராக வேலை பார்த்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்தில் இறந்த ரவிச்சந்திரன் கட்டிட மேஸ்திரி ஆவார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு 10 மாத கைக் குழந்தை ஒன்று உள்ளது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வீடு புகுந்து 2 பவுன் செயினை மர்மநபர் திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பென்னாகரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த வேனை லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.

    ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த அவர்கள் பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம்- மேச்சேரி செல்லும் சாலை சின்னம்பள்ளி அருகே உள்ள வளைவு பாதையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கட்டுபாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சோபனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உறவினர்களான 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான சோபனா உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    பென்னாகரம் அருகே சுற்றுலா சென்றபோது கார் புளியமரத்தில் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்யோன் (வயது36). இவர் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ஜெனிபர் (32) மற்றும் உறவினர்கள் ஆமேஷ் (13), சித்ரா (20) ஆகியோருடன் ஒகேனக்கலுக்கு காரில் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். காரை சினியோன் ஓட்டி வந்தார்.

    சினியோன் பெற்றோர்களான திருவண்ணாமலை மாவட்டம், மேல்புதேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி தேவராஜ் (60)- நீலாவதி (55) ஆகியோருடன் உறவினர்களின் குழந்தைகளான ரோகித் (4), ஜெயலெட்சுமி (12), ஏஞ்சல் (11), ரேஞ்சல் (10), கவிதா (7)ஆகிய 7 பேரை செல்லும் வழியில் அழைத்து சென்றார்.

    அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் செல்லும் சாலையில் ஏறு பள்ளி அருகே வந்த போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரில் இருந்த சினியோன் உள்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×