search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palar River"

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.
    • பாலாற்றில் நீர் வரத்தால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.

    கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மீண்டும் பாலாற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாவூர் பழைய சீவம் அணைக்கட்டில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் மற்றும் வாயலூர் தடுப்பணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வழிந்தோடுகிறது.

    மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

    எனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம்.

    மேலும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமியர்களை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்று பகுதியில் தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கடலை நோக்கி பாய்ந்து வருகிறது.

    மேலும் இன்று காலை முதலே மழையும் பெய்து வருவதால், நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கூடுதலாக கண்காணித்து, கரையோர பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.

    ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.

    இந்த ஆற்றில் இன்று அதிகாலை முதல் மீண்டும் 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

    இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

    மரத்தின் ஒரு பகுதியில் தூண்கள் அப்படியே இறங்கி உள்ளது. தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைக்கும் அலுவலகங்கள் ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னை தான் வரவேண்டும்.

    பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

    பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது.

    தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று முன்தினம் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்துள்ளது.

    பாலாற்றின் கிளை நதிகளான அகரம் ஆறு, மலட்டாறுகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது.

    பொன்னை ஆறு, பாலாறு சந்திக்கும் இடத்தில் கடல் போல் காட்சியளிக்கிறது. ராணிப்பேட்டை பாலாற்றில் இன்று காலை சுமார் 70 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்ந்து ஓடி சென்றது.

    1903-ம் ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாக பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத்தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    1903-ம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தையும் தாண்டி 118 ஆண்டுக்கு பிறகு பாலாற்று வெள்ளம் புதிய வரலாறு படைத்துள்ளது.

    பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் பெருவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாலங்களில் நின்று குழந்தைகளுடன் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற வேடிக்கை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



    பாலாற்றில் இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்வதால் வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரண்டனர்.
    சென்னை:

    பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றது. இன்றும் அதே போல தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. வேலூரில் தொடங்கி கல்பாக்கம் வரை பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் குறுக்கே உள்ள அனைத்து பாலங்களையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரள்கிறார்கள். பாலங்களின் நடுவில் நின்றும் அதன் அழகை ரசிக்கிறார்கள்.

    ஓச்சேரி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 7 இளைஞர்களை மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் மீட்டனர்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் நந்தகுமார் (வயது 18), ரஞ்சித்குமார் மகன் சின்ராசு (18), முனுசாமி மகன் விசுவநாதன் (20), சிங்காரம் மகன் சுபாஷ் (20), முருகன் மகன் ரமேஷ் (20), சுதாகர் மகன் கோகுல் (20),மதியழகன் மகன் அமுதன் (20). இவர்கல் 7 பேரும் மாமண்டூர் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்து்ள்ளது.

    இதனால் 7 பேரும் கரைக்கு செல்ல முடியாமல் ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வருவாய் துறையினர் கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நவீன கருவிகளுடன் வருகை புரிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

    சுமார் ½ மணி நேரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் மணல் திட்டில் சிக்கி தவித்த 7 பேரையும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நவீன மோட்டார் படகின் உதவியோடு மீட்டனர். அப்போது பாலாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிந்தது.

    7 பேரையும் மீட்ட பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்களை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.
    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்ட மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு பாய்ந்து வருகின்ற பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் அம்மாநில அரசு 30 தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் பாய்கின்ற பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு 21 தடுப்பணைகளை கட்டி அம்மாநில விவசாயத்திற்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீரை தேக்கி பயன்படுத்தி வருகிறது.

    இப்படி ஆந்திர அரசு பாலாற்றின் துணை ஆறுகளில் ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளால் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் பாலாற்றின் தண்ணீரை நம்பியுள்ள தமிழகத்தில் குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளது.

    அதாவது கர்நாடகவில் இருந்து பாய்ந்து வருகின்ற பாலாறு ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்துக்கு வரும் போது பாலாற்றின் தண்ணீரால் விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு, குடிநீராகவும் பயன்படுகிறது.

    இச்சூழலில் தற்போது ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட கருத்துருவை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் நதிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மாநிலங்களுக்கு இடையே பாய்கின்ற ஆறுகளில் எந்த ஒரு மாநில அரசின் சம்மதம் இல்லாமல் புதிது புதிதாக தடுப்பணைகள் கட்டக்கூடாது என்பது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    இப்படி போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கண்டிப்போடு எடுத்துக்கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    எனவே ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்ட மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார். #GKVasan

    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. #Reservoir #PalarRiver
    வேலூர்:

    கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.



    உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

    இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.

    பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver




    ×