search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palar river Dam"

    • நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
    • தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திரா அரசு கூறியிருந்த நிலையில், எந்த விழாவும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு 315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:-

    பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

    இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது.

    இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும் என்று கூறியுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்ட மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்துக்கு பாய்ந்து வருகின்ற பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் அம்மாநில அரசு 30 தடுப்பணைகள் கட்ட முயற்சிகள் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை ஆரம்பக்கட்டத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    ஆந்திர மாநிலத்தில் பாய்கின்ற பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு 21 தடுப்பணைகளை கட்டி அம்மாநில விவசாயத்திற்கு தேவைக்கு அதிகமாகவே தண்ணீரை தேக்கி பயன்படுத்தி வருகிறது.

    இப்படி ஆந்திர அரசு பாலாற்றின் துணை ஆறுகளில் ஏற்கனவே கட்டிய தடுப்பணைகளால் தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் பாலாற்றின் தண்ணீரை நம்பியுள்ள தமிழகத்தில் குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளது.

    அதாவது கர்நாடகவில் இருந்து பாய்ந்து வருகின்ற பாலாறு ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்துக்கு வரும் போது பாலாற்றின் தண்ணீரால் விவசாய நிலங்கள் பயன்பெறுவதோடு, குடிநீராகவும் பயன்படுகிறது.

    இச்சூழலில் தற்போது ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட கருத்துருவை ஆந்திர அரசுக்கு அனுப்பி வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் நதிநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மாநிலங்களுக்கு இடையே பாய்கின்ற ஆறுகளில் எந்த ஒரு மாநில அரசின் சம்மதம் இல்லாமல் புதிது புதிதாக தடுப்பணைகள் கட்டக்கூடாது என்பது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    இப்படி போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சித்தால் தமிழக விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கண்டிப்போடு எடுத்துக்கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    எனவே ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணைகள் கட்ட மேற்கொள்ளும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார். #GKVasan

    ×