search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர அரசு"

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
    • நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    பின்னர் ஜாமீனில் வெளிய வந்தார். சந்திரபாபு நாயுடு நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    ஏழுமலையான் காலடியில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவன் நான். கஷ்டம் வரும் காலங்களில் காப்பாற்றுவார்.


    அலிபிரியில் தன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    உலகில் இந்தியா முதல் இடத்திலும் தெலுங்கு இனம் உலகின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை தர வேண்டும் என சாமியிடம் வேண்டிக் கொண்டேன். தனது செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 58,278 பேர் தரிசனம் செய்தனர். 17,220 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.




    • பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.
    • ஆந்திரா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது.

    அமராவதி:

    நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதேநேரம் பீகார் அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.

    இந்த வரிசையில் ஆந்திராவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. அங்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
    • ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

    இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
    • கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    இதனிடையே கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்திருக்கும் தண்ணீரை தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

    இதற்கிடையே ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகமாகியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.71 அடியாக பதிவானது. 1.271 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

    அமராவதி:

    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ந்தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். சந்திரபாபு நாயுடு கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய பின் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற இரண்டு பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே எஸ் ஜவஹர் ரெட்டி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பி சேஷசயனா ரெட்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விசாரணை கமிஷன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளன.

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள முக்களகண்டிகை மற்றும் கதரப்பள்ளி கிராமங்களுக்கு அருகில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் ஆற்று நீரை நம்பி வாழும் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    கொசஸ்தலையாறு ஆற்றுப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு ஆகிய இரண்டும் மாநிலங்களுக்கு இடையே உள்ளவை என்பது தாங்கள் அறிந்ததே. மாநிலங்களுக்கு இடையேயான நதியாக இருப்பதால், கீழ் கரையோர மாநிலத்தின் அனுமதியின்றி, கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேல் கரையோர மாநிலம் எந்த புதிய கட்டமைப்பையும் திட்டமிடவோ, ஒப்புதல் அளிக்கவோ, கட்டவோ முடியாது.

    கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள்.

    இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×