search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natural fertilizer"

    • கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம்.

    அரவேனு,

    கோத்தகிரி பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா உள்ளது. இது 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பேரூராட்சியின் 21 வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    அதன்பிறகு இங்கு மக்கும்- மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில், கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யபட்டு அங்கு தற்போது 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது விவசாயிகள் நலன் கருதி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்ய உள்ளோம். எனவே தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரம் வாங்கி பயன் பெறலாம் என்றனர்

    • பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
    • மண்புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    அவிநாசி :

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் கடந்த மே மாதம் துவங்கப்பட்டது.அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அவிநாசி பேரூராட்சி சார்பில் தினமும் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம், கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டன் கணக்கில் வாங்குவோருக்கு விலையில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் மண்புழு உரத்தில் கலந்துள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சான்று பெறப்பட்டுள்ளது. பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் ஒரு டன் உரம் விற்பனையாகியுள்ளது. அரசின், தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடாக இப்பணி அமைந்துள்ளது என்றனர்.

    • அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • 1.50 டன் குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு உரங்களாக தயாரிக்கப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறப்படுகிறது.

    தினமும் 11.50 டன்குப்பைகள் அவினாசியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம், மண்புழு உரம் ஆகிய உரங்களாக தயாரிக்கப்படுகிறது. தரமான இந்த உர விற்பனையை அவினாசி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் பேரூராட்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) கணேசன், அவினாசி பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இது குறித்து பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி கூறுகையில், வளம் மீட்பு பூங்கா, மற்றும் பேரூராட்சி அலுவலகத்தின் மூலம் உரவிற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மாடி தோட்டம், வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் மண்புழு உரம் 5 கிலோ 50 ரூபாய், இயற்கை உரம் 10 கிலோ 50 ரூபாய் என பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

    பேரூராட்சி அலுவலகம் மற்றும் வளம் மீட்பு பூங்காவில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என்றார்.

    • திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியில் மண்கூம்புகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • மணல் நிரப்பி 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். 5 மாதத்தில் இயற்கை உரமாக மாறுகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் நாட்டு மாடு கொம்பில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் மண்கூம்பு மூலம் இயற்கை உரம் தயாரிக்க தொடங்கி உள்ளனர்.

    இதில் மணல் நிரப்பி 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து பராமரித்து வருகின்றனர். 5 மாதத்தில் இயற்கை உரமாக மாறுகிறது. இந்த உரத்தை பயன்படுத்தினால் வேர் முடிச்சுகள் அதிகரிக்கும். பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும். மேலும் விவசாய நிலங்களில் மண்புழு உள்ளிட்டவைகள் அதிகரிக்கும். இதன்மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

    தற்போது மண்கூம்பு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,

    மண்கூம்பு தயாரிக்க களிமண் பிடித்து ஒரு வாரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் 8 மணிநேரம் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதன்மூலம் இயற்கை உரம் தயாரித்தால் நல்ல மகசூல் கிடைக்கும். இதனை அறிந்து பெங்களூர், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.

    இயற்கை உரம் என்பதால் எந்த உடல்நலக்கேடும் ஏற்படுவதில்லை. இதனால் இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாரத்திற்கு 2000-க்கும் மேற்பட்ட மண்கூம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    • தொடர் மழையால் உழவுப்பணி தொடக்கம்
    • ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை இயற்கை உரம் தேவைப்படுகிறது.

     அரவேனு :

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது.

    மலைக்காய்கறிகள்

    விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இது தவிர இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் அதிக விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது கோழிக்கழிவு இயற்கை உரங்களை, உழவு செய்த விளைநிலங்களில் மண்ணுடன் கலந்து இடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபற்றி கோத்தகிரி பகுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் மலைக்காய்கறிகளை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளோம். மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் காய்கறி விளைச்சல் வெகுவாக அதிகரிக்கிறது.

    40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உரத்தை விளைநிலத்திற்கு கொண்டு சேர்க்க ரூ.200 செலவாகிறது.

    ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை இயற்கை உரம் தேவைப்படுகிறது. விளைநிலத்தைத் தயார் செய்து பீட்ரூட் பயிரிட உள்ளேன். ஒரு ஏக்கர் நிலத்தில் பி.ஜே. புரோ ரக விதைகளை பயிரிட 3 கிலோ தேவைப்படும். 300 கிராம் கொண்ட விதை பாக்கெட்டுகள் ரூ.1,050 முதல் ரூ.1,700 வரை தரத்திற்கு தக்கவாறு கிடைக்கிறது.

    ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்ய ரூ.5 ஆயிரம் செலவாகிறது.

    பீட்ரூட் விதைகளை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் ஒருமுறை சாண உரத்தை போட்டு நன்கு பராமரித்து வந்தால் சுமார் 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×