search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namassivayam"

    • எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறுவதை அ.தி.மு.க. நிரூபிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சரும், புதுச்சேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காரைக்காலில் உள்ள பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளேன்.

    எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடக்கத்தில் இருந்தே சொன்னதுபோல வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

    வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படும். காரைக்காலில் மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வெற்றி பெற்ற பின்னர் எம்.பி. என்ற முறையில் பாடுபடுவேன். அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.

    புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளது போல மத்திய அரசுடன் பேசி அனைத்து கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்.
    • நாராயணசாமி வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து இதுபோல பேசி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் 2 மாதம் ஒரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். போலீஸ் துறையில் நடந்த ஆய்வில் நகரில் பெருகிவரும் நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சட்ட-ஒழுங்கு, போதைப்பொருள் விற்பனை தடுப்பு, தொடர் குற்றவாளிகளை கண்காணித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாங்கள் கவர்னரை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும். துறை சார்ந்த கோப்புகளுக்கு அனுமதி, இலவச அரிசி வழங்குவது போன்ற திட்டங்களை ஆலோசனை செய்ய சென்றோம். எங்களுக்குள்ளோ, முதல்-அமைச்சருடனோ, கூட்டணியிலோ எந்த குழப்பமும் இல்லை.

    எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். முதலில் அவர் கட்சியில் அவருக்குள்ள பிரச்சினையை பார்க்க வேண்டும். அந்த கட்சியினரே அவர் கட்சி நடவடிக்கையில் தலையிடக்கூடாது என புகார் தெரிவித்து வருகின்றனர்.

    அவர் முதலில் அவர் கட்சியை பார்க்கட்டும், எங்கள் கூட்டணியில் மூக்கை நுழைக்க வேண்டும். இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.

    இந்த வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து அவர் இதுபோல பேசி வருகிறார். அரசியலில் நானும் உள்ளேன் என தெரியப்படுத்த, எங்கள் அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.

    இது அவரின் அனுபவத்துக்கும், வயதுக்கும் அழகல்ல. அவர் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    ×