search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister parameswara"

    மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்று துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #MinisterParameswara
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பேசியதாவது:-

    மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் ஏழை மக்கள், மோடியை மன்னிக்க மாட்டார்கள். காங்கிரசார் கட்சியை பலப்படுத்தினார், 10 மோடிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மோடி மீண்டும் பிரதமராக முடியாது.

    கா்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ராகுல் காந்தியை பிரதமராக்க நிர்வாகிகள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலை வழங்க, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை முடக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

    சரக்கு-சேவை வரி திட்டத்தால், சிறு வியாபாரிகள் நஷ்டத்தில் சிக்கினர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமானவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். கருப்பு பணம் குறையும் என்று மோடி சொன்னார். ஆனால் அதுபோல் கருப்பு பணம் எதுவும் குறையவில்லை.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் மோடி ஆட்சியின் தோல்விகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களின் மனதை வெல்ல வேண்டும்.

    இவ்வாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா பேசினார். #MinisterParameswara
    எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும் பா.ஜனதாவினரால் கூட்டணி அரசை கவிழ்க்க இயலாது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #MinisterParameswara #BJP
    மைசூரு :

    மைசூரு மாவட்டம் வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த பூஜையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசை அதிகரித்துவிட்டது. அதனால்தான் அவர் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், அவருடைய கனவு பலிக்காது. கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது.



    அதைத்தான் நாங்கள் செய்தோம். பா.ஜனதாவினர் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஆளும் கூட்டணி அரசில் உள்ள குறைகளை கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம். குறிப்பாக கூட்டணி அரசின் தவறுகள், ஊழல்களை சுட்டிக் காட்டலாம். அதைவிடுத்து கூட்டணி அரசை கவிழ்ப்பதற்காக பொய் பிரசாரம் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள் எத்தனை சதித்திட்டங்கள் போட்டாலும், என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் கூட்டணி அரசை கவிழ்க்க இயலாது.

    வருகிற 8-ந் தேதி கர்நாடக மாநில பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்வார். அதை பா.ஜனதாவினரால் தடுக்க முடியாது. காங்கிரசில் அதிருப்தியாளர்கள் யாரும் கிடையாது. காங்கிரசில் அனைவரும் சமம் தான்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #MinisterParameswara #BJP
    ×