search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekah Ceremony"

    • மதுபான விற்பனை உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்தார்.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உத்தரப் பிரதோம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை நிதித் துறை (கலால்) இணைச் செயலர் இன்று பிறப்பித்துள்ளார்.

    ஜெய்ப்பூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஹெரிடேஜ் மேயர் முனேஷ் குர்ஜார், கடந்த வாரம் ஜனவரி 22 அன்று நகரத்தில் உள்ள பாரம்பரிய பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு  நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழா 6-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 7-ந் தேதி கணபதி பூஜையும், 8-ந் தேதி பவானி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9-ந் தேதி யாகசாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 10-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 7 மணிக்கு நடந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    ×