search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian killed"

    லெபனான் நாட்டில் உள்ளூர்வாசி ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
    பெய்ரூட்:

    லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று காலை இந்திய தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர்வாசி ஒருவர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 
    துபாயில் உடன் தங்கியிருந்த இந்தியரை கொன்ற வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #PakManJailed
    துபாய்:

    துபாயில் ஜெபேல் அலி ஹோட்டலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி, அறையில் உள்ள மின்விளக்குகளை அணைக்காமல் வெளியேறிய காரணத்தினால் இந்தியருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதன் பின்னர் அந்த பாகிஸ்தானியை உடைமைகளுடன் வெளியேறுமாறு இந்தியர் கூறியுள்ளார்.  இதனால் பாகிஸ்தானியர் அந்த  அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பி வந்த பாகிஸ்தான் நபர் ஆத்திரமடைந்து தனது பையில் இருந்து கத்தியை எடுத்து இந்தியரைக் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து ரூமில் தங்கியிருந்த மற்ற நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,  கொலை செய்யப்பட்ட இந்தியரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெஞ்சில் கத்தியால் ஆழமாக குத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், அறைக்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக ஹோட்டலின் மேற்பார்வையாளர் கூறினார்.

    இச்சம்பவத்திற்கு முன்னதாக மது அருந்தியிருந்ததாகவும், எந்தவித விரோதத்தோடும் கொலை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நபர், விசாரணையின் போது கூறினார்.

    இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு, குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளி 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்  என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #PakManJailed
    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு தலிபான்கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அங்கிருந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன.

    இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக நேற்று முதல்கட்ட தகவல் வெளியானது. இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. 

    பலியான இந்தியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற உடனடி தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் கொல்லப்பட்டவரின் உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack
    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

    நியூஜெர்சி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

    அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

    இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


    தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

    அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

    தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

    ×