என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்
Byமாலை மலர்15 Jan 2019 10:10 AM GMT (Updated: 15 Jan 2019 10:10 AM GMT)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்றிரவு தலிபான்கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அங்கிருந்த வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக நேற்று முதல்கட்ட தகவல் வெளியானது. இன்றைய நிலவரப்படி இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் அதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
பலியான இந்தியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற உடனடி தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் கொல்லப்பட்டவரின் உடலை விரைவாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் காபுலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X