search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health officer"

    • நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார்.
    • டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக்கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என புதிய நல அலுவலர் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே மாநகர நல அலுவலராக நெல்லையில் பணியாற்றியவர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டாக்டர் சரோஜா மீண்டும் நெல்லை மாநகர நல அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சுகாதாரம் தொடர்பான மழைக்கால முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்படும். டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக் கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என்றார். முன்னதாக அவர் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகி யோரை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு யாருக்கும் இல்லை என சுகாதார துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 66). மஞ்சள் பைகளுக்கு சாயமேற்றும் தொழிலாளி.

    சளி தொல்லையாள் இவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை சோதித்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர் சிசிச்சை பலனின்றி கடந்த வாரம் இறந்தார். இதையடுத்து அவர் வசித்து வந்த பாரதிநகர் பகுதி மக்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

    எனவே சுகாதாரதுறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முருகன் வசித்து வந்த பாரதி நகருக்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழுவினர் அந்த பகுதியில் வேறு யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலால் இறந்த முருகன் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். எனவேதான் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். காய்ச்சல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதித்தோம். ஆனால் வேறுயாருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு, அறிகுறிகள் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

    தும்மல், இருமல் மூலமாக மனிதர்களால்தான் இந்த காய்ச்சல் பரவும். பன்றிகள் மூலம் பன்றி காய்ச்சல் பரவுவதில்லை. இறந்த முருகன் வசித்த பகுதியில் பன்றிகள் இல்லை.

    மருத்துவ குழுவினர் தேவைப்பட்டவர்களுக்கும், பிற நோய் பாதிப்பு இருந்தவர்களுக்கும் மருந்துகள் வழங்கினர். மாவட்டத்திலும் வேறெங்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×