search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை பதிவேடு"

    • வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார்
    • காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார்

    நாகர்கோவில் : 

    தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்ராவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் ராஜீ வை பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பணியில் இருந்த போலீஸாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தி னார். தொடர்ந்து கொலங்கோடு காவல் நிலையம் சென்று காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு வரவேற்பு புத்தகத்தை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியாக பராமரிப்பு செய்ததற்காக கொல்லங்கோடு காவல் நிலைய எழுத்தர் ஜஸ்டின் தேவ அருள்தாஸ் க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார் தொடர்ந்து பட்டாலியன் பிரிவு போலீசாரின் குறை களையும் கேட்டு அறிந்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    • வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் நடைப்பெற்றது.
    • ்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர், மாணவர் வருகை பதிவேட்டை சரியாக பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    டாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளி தலைமையாசிரியர்க ளுக்கான கூட்டம் வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி தலைமையில் நடைப்பெற்றது.

    ்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தலைமையா சிரியர்களுக்கு பள்ளி வயது குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்த்தல், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இறுதி வகுப்பை முடித்த மாணவர்கள் மேல்வகுப்பில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல், மாணவர் சேர்க்கை.

    நீக்கல் விபரங்களை எமிஸ் தளத்தில் சரியாக பதிவு செய்தல், ஆசிரியர் , மாணவர் வருகைப் பதிவேட்டை சரியாக பராமரிப்பது, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது,ஆசிரியர் தினசரி பாடக்குறிப்புகளை தயார் செய்வது,மாண வர்களின் தமிழ்,ஆங்கிலம் வாசிப்பு த்திறனை மேம்படு த்துவது, மாணவ ர்களின் கற்றல் திறன் வெளிப்பாடுகளை சரியாக கண்காணிப்பது.ஜாலி போனிக்ஸ் மூலம் ஆங்கிலம் கற்பிப்பது , கணிதம் கற்றல் திறனை மேம்படுத்துவது ,எழுத்துப் பயிற்சி அளிப்பது, பள்ளியின் அனைத்துப் பதிவேடுகளையும் சரியாக வைத்துக்கொள்வது, இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மேற்பார்வை செய்யது, பள்ளிகளின் வளாகம் , வகுப்பறை,கழிவறை ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பது ஆகியவை களை சரியாக வைத்து க்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    ×