search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaming"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த பி.ஜி.எம்.ஐ. கேமிற்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.
    • மே 27 ஆம் தேதி முதல், கூகுள் பிளே ஸ்டோரில் பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது.

    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (பி.ஜி.எம்.ஐ.) கேம் இந்திய சந்தையில் விளையாட கிடைக்கிறது. இந்தியாவில் இந்த கேமினை மீண்டும் வெளியிட பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்து இருந்தது. அந்த வரிசையில், கடந்த 27 ஆம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட பி.ஜி.எம்.ஐ. கேம் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய கிடைத்தது.

    எனினும், கேமினை விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. பி.ஜி.எம்.ஐ. கேம் இன்று (மே 29) முதல் விளையாட கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் படி, இணையத்தில் வெளியான தகவல்களை உண்மையாக்கும் வகையில், தற்போது கேமினை அனைவரும் விளையாட முடியும்.

    பி.ஜி.எம்.ஐ. கேமில் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பவை என்ன?

    - இந்தியாவில் மீண்டும் வெளியாவதை கொண்டாடும் வகையில், பி.ஜி.எம்.ஐ. பயனர்களுக்கு நான்கு இலவச மற்றும் நிரந்தர ரிவார்டு அவுட்ஃபிட்கள் (outfit) வழங்கப்படுகின்றன.

    - அதிக ஆயுதங்கள் மற்றும் பொருட்கள், எலிவேட்டர்கள், ஹட்ஸ் ஆன் ஃபயர், டேக்டிக்கல் கிராஸ்போக்கள் மற்றும் ஜிப்லைன்களை கொண்ட புதிய மேப் பி.ஜி.எம்.ஐ. கேமில் தற்போது வழங்கப்படுகிறது. இந்த மேப் நுசா (Nusa) என்று அழைக்கப்படுகிறது.

    - நுசா மேப்-இல் டேக்டிக்கல் கிராஸ்போ மற்றும் SN200 ஷாட்கன், குவாட் 2 இருக்கை கொண்ட வாகனம் உள்ளது.

    - மிக விரைவில் உயிரிழப்போருக்காக 'சூப்பர் ரிகால்' (Super Recall) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    - புதிய பி.ஜி.எம்.ஐ. கேமிலும், முன்பை போன்றே இன்-கேம் இவென்ட்கள் (Event) உள்ளன.

    - 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த கேமினை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரங்களும், 18 வயதுக்கும் மேற்பட்டோர் ஆறு மணி நேரங்களுக்கு மட்டுமே விளையாட முடியும்.

    - மைனர்களுக்காக பி.ஜி.எம்.ஐ. கேமில் பேரண்டல் கண்ட்ரோல் மற்றும் பணம் செலுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    பி.ஜி.எம்.ஐ. கேமினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பயனர்கள், தற்போது கேமினை விளையாட முடியும். இதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று பி.ஜி.எம்.ஐ. கேமினை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்தாலே போதும்.

    பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க ஈட்டிய வருவாய் தொகை விவரம் வெளியாகியுள்ளது. #PUBG



    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,362 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த லாபம் 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2,143) ஆகும்.

    மொத்த வருவாயில் பெருமளவு பங்கு கம்ப்யூட்டருக்கான பப்ஜியில் இருந்து கிடைக்கிறது. முதற்கட்டமாக பப்ஜி கேம் கம்ப்யூட்டரில் அறிமுகமாகி அதன்பின் இதன் மொபைல் பதிப்பை டென்சென்ட் கேம்ஸ் உருவாக்கியது. பப்ஜி கேம் விதிகளை பொருத்தவரை கேம் துவங்கும் போது பயனர் வானில் இருந்து தீவு ஒன்றில் இறங்க வேண்டும்.



    தீவில் இறங்கியதும் அவர்களுக்கான சவால்கள் இருக்கும், அவற்றை எதிர்கொண்டு தனியே இருக்கும் கடைசி நபர் வெற்றி பெற்றவராக முடியும். கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,463 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது.

    கன்சோல்கள் மற்றும் மொபைல் பதிப்புகளில் இருந்து பப்ஜி கேம் வருவாய் முறையே ரூ.414 கோடி மற்றும் ரூ.450 கோடிகளை ஈட்டியிருக்கிறது. பப்ஜி கார்ப் வருவாய் விவரங்கள் VG247 மூலம் வெளியாகியிருக்கிறது. பப்ஜி கேம் ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கேமாக இருக்கிறது.

    ஆசியாவில் மட்டும் பப்ஜி வருவாயில் சுமார் 53 சதவிகிதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆசியாவை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை அதிக வருவாய் ஈட்டித்தரும் பகுதிகளாக இருக்கின்றன.
    பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile



    குரஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

    ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது. 



    பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 

    சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. 

    சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.

    ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து டென்சென்ட் இந்தியா களத்தில் குதித்திருக்கிறது. #PUBG



    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பப்ஜி விளையாடியதாக பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு டென்சென்ட் இந்தியா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.

    இந்நிலையில், அவர்களது கவலையை போக்கும் வகையில், இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என டென்சென்ட் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.



    இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் வசதி மொபைல் இன்டர்ஃபேசில் இடம்பெறும் என தெரிகிறது. பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ள விரும்புகிறோம். 

    மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொர்ந்து செய்வோம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணையை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
    ×