search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PUBG"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார்.
    • பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மும்பை:

    பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் சீமாஹைதர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திருணமத்திற்கு பிறகு கராச்சியில் குடியேறினார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இந்நிலையில் சீமாஹைதர் தனது கணவரை விட்டு விட்டு, காதலனை பார்ப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தார். பின்னர் சீமாஹைதர் சச்சினுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சீமாஹைதரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

    மேலும் சீமாஹைதருக்கு உதவியதாக அவரது காதலன் சச்சினும் கைது செய்யப்பட்டார். பின்னர் 7-ந் தேதி இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில் சீமாஹைதர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த சிலர் சீமாஹைதரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். உருது மொழியில் பேசிய அவர், சீமாஹைதரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பாவிட்டால் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலுக்கு மும்பை போலீசார் தயாராக இருக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மும்பை போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கேமின் தாக்கங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாக மத்திய மந்திரி கூறினார்.
    • ஆயுதங்களுடன் எதிரியை அழிக்க சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த ஆன்லைன் விளையாட்டு இது.

    புதுடெல்லி:

    தென் கொரியாவைச் சேர்ந்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி கேம். இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது. எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது 2020ம் ஆண்டு பல்வேறு சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    அதன்பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஆப்பை மத்திய அரசு தடை செய்தது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சுமார் 10 மாதங்களாக இந்தியாவில் பிஜிஎம்ஐ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ கேமை கிராப்டன் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சர்வர் இருப்பிடங்கள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு கேமிங் நிறுவனம் இணங்கிய பிறகு, மூன்று மாதத்திற்கு சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த கேமுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அடுத்த 3 மாதங்களில் பயனருக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுகிறதா? பயனர்கள் அடிமையாகிறார்களா? என்பதுபோன்ற பிற விஷயங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு, ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுதான் பப்ஜி. இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக்கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ சேர்ந்தோ சண்டையிடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டு. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு விளையாட வேண்டும். பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற விளையாட்டு தேவையில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

    • பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
    • பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    காபூல் :

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அவர்கள் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகளவில் பிரபலமான பப்ஜி மற்றும் டிக்டாக் ஆகிய 2 செயலிகளின் பயன்பாட்டுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக கூறிய தலிபான்கள் இன்னும் 90 நாட்களுக்குள் இரு செயலிகளும் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இந்த இரண்டு பிரபலமான செயலிகளுக்கு ஒரு நாடு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பப்ஜி, டிக்டாக் உட்பட நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்த 2 செயலிகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கூடப்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சசிகுமார்(25), இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான அஜித் என்பவருடன் செல்போனில் பப்ஜி விளையாட்டை விளையாடினார்.

    அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் சசிக்குமார், அஜித் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் உறவினரான செல்வம், சசிகுமாரின் ஆதரவாளர்கள் விஜயகுமார், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவரது முதல் மனைவி லட்சுமி நரசம்மா. அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். சாந்தி ராஜ், கவுரி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு மசூலிப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    லட்சுமி நரசிம்மாவின் மகன் பிரபு (வயது 16).தனது தந்தையுடன் மசூலிப்பட்டினத்தில் தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். பிரபு தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தார்.

    அப்போது விளையாட்டில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் நண்பர்கள் அவரை கேலி கிண்டல் செய்தனர். இதில் விரக்தி அடைந்த பிரபு இரவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபு தூக்கில் தொங்குவதை கண்ட சாந்தி ராஜ் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர்.

    இதுகுறித்து சிலகளபுடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறிபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பிரபுவின் தாய் தனது மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2-வது மனைவி கவுரி மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் பிரபு தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சித்தி கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகையையொட்டி, ஹோலிகா தகனம் எனும் நிகழ்வு நடைபெறும். இதில் மசூத் அசார், பப்ஜி கேம் ஆகியவற்றின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. #Holi #HolikaDahan
    மும்பை:

    ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இதேப் போன்று நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்ஆப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.



    இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர்.  இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan


    இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து டென்சென்ட் இந்தியா களத்தில் குதித்திருக்கிறது. #PUBG



    குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பப்ஜி விளையாடியதாக பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு டென்சென்ட் இந்தியா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில நகரங்களில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களில் பெற்றோர்களும், சில பள்ளி நிர்வாகத்தினரும் பப்ஜி மொபைல் கேமிற்கு எதிராக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அவர்களை பொருத்தவரை பப்ஜி மொபைல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் ஒன்றாக பாரக்கப்படுகிறது.

    இந்நிலையில், அவர்களது கவலையை போக்கும் வகையில், இந்தியாவுக்கென ஆரோக்கியமான கேம்பிளே அமைப்பை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என டென்சென்ட் இந்தியா தெரிவித்திருக்கிறது. இதுதவிர குறைந்த வயதுடையோருக்கு கேம் விளையாடும் நேரத்தை குறைப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.



    இதனால் எதிர்காலத்தில் பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, பயனர்கள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளும் வசதி மொபைல் இன்டர்ஃபேசில் இடம்பெறும் என தெரிகிறது. பப்ஜி மொபைல் மீதான தடை பற்றி அதன் டெவலப்பர்கள் கூறும் போது, இந்த கேமிற்கு எதிராக வரும் கருத்துக்களை புரிந்து கொள்ள விரும்புகிறோம். 

    மேலும் இந்த கேம் தொடர்பான எங்களது கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொர்ந்து செய்வோம். பப்ஜி மொபைல் விளையாடுவோருடன் நாங்கள் இருக்கிறோம், இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி மொபைல் கேமினை விளையாடியதாக பத்து பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலத்தில் பப்ஜி மொபைல் மற்றும் மோமோ சவால்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மார்ச் 6 ஆம் தேதி சிறப்பு அரசாணையை அம்மாநில அரசு பிறப்பித்து இருந்தது.
    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அறிமுகமான அபெக்ஸ் லெஜண்ட்ஸ் கேமினை மூன்று நாட்களில் பத்து லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். #ApexLegends



    சர்வதேச கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களான இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்துள்ளன.

    பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். 

    தற்சமயம் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் சோனியின் பிளே ஸ்டேஷன் 4 (PS4) கன்சோல்கள், மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் கணினிகளில் கிடைக்கிறது. எனினும், பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களிலும் கிடைக்கிறது.



    வெளியான மூன்று நாட்களில் அதிகளவு வரவேற்பை பெற்றிருக்கும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் கேம்களை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 2018 வரை ஃபோர்ட்நைட் விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தினமும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கை இரண்டு கோடியாக இருக்கிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் முதற்கட்டமாக கேமிங் கன்சோல்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த கேம் பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்று ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்து, தினமும் சுமார் மூன்று கோடி பேர் விளையாடும் மொபைல் கேம் பற்றி பார்ப்போம். #PUBGmobile #gaming



    பப்ஜி மொபைல் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரித்துள்ளது என பப்ஜி உருவாக்கிய பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பப்ஜி விளையாடுவோரின் எண்ணிக்கை இது என்றாலும், இதில் சீனா மட்டும் சேர்க்கப்படவில்லை.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பப்ஜி விளையாடுவோர் எண்ணக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த மெமரி கொண்ட ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் பப்ஜி மொபைல் விளையாட முடியும் என்பதால், இந்த கேம் அதிக பிரபலமாக முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.

    பப்ஜி மொபைல் கேமினை உலகம் முழுக்க சுமார் 20 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். தினசரி பப்ஜி மொபைல் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த கேம் பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கிறது. சில சந்தைகளில் ஃபோர்ட்நைட் பயனர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றாலும், பப்ஜி மொபைல் கேம் இதனை பின்தள்ளி இருக்கிறது.



    குறிப்பாக ஃபோர்ட்நைட் கேமினை பதிவு செய்து விளையாடுவோர் எண்ணிக்கை 20 கோடியாக இருக்கிறது. ஃபோர்ட்நைட் மற்றும் பப்ஜி மொபைல் பிரபலமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் கேமாக பப்ஜி மொபைல் ஃபோர்ட்நைட் கேமினை பின்தள்ளியது. 

    சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி ஆசியா மற்றும் சீன சந்தைகளில் பப்ஜி மொபைல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பப்ஜி மொபைல் பிரபலமானதாக இருக்கும் நிலையில், கணினி மற்றும் கன்சோல்களில் இந்தியா போன்ற சந்தைகளில் பிரபலமாக இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பப்ஜி மொபைலில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகி்ன்றன. பப்ஜி மொபைல் பல்வேறு இயங்குதளங்களில் சீராக இயங்கும் படி மிக நேர்த்தியாக வழங்கப்படும் நிலையில், ஃபோர்ட்நைட் பல்வேறு சாதனங்களில் விளையாட ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்படவில்லை.
    வி.ஐ.டி. கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #PUBG



    ஸ்மார்ட்போன் ஆன்லைன் கேமிங்கில் இந்த ஆண்டின் பிரபல கேமாக பப்ஜி இருக்கிறது. பப்ஜி விளையாட்டு உலகில் அதிகம் விற்பனையாகும் கணினிக்கான் கேம்களில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது. பப்ஜி விளையாடுவதால் மாணவர் தங்கும் விடுதியின் சூழல் பாதிக்கப்படுவதால் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட வி.ஐ.டி. மாணவர் தங்கும் விடுதி தடை விதித்துள்ளது.

    இத்தகவலை தங்கும் விடுதியின் காப்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக ரெடிட் தளத்தில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பப்ஜி விளையாடுவதை தவிர்த்து உடல் மற்றும் மன வலிமையை பரைசாற்றும் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும், மாணவர்கங்கள் தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விடுதியின் காப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



    புதிய விதிமுறையை மாணவர்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாணவிகள் தங்கும் விடுதியில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    பொறியியல் கல்லூரியில் பப்ஜி விளையாட மாணவர்களுக்கு தடை விதிக்ககப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேமிற்கான தடை இருபாலினத்தவருக்கும் பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுகாதார மையம் கேமிங்கை ஆரோக்கிய சீர்கேடாக அறிவித்தது. இத்துடன் மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் துறைக்கான தேசிய ஆணையம் பப்ஜி கேம் பலரை அடிமையாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
    சோனி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டது. பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜி பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. #PUBGPS4 #PlayStation4



    ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி ஒவ்வொன்றும் தனித்தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    பிரத்யேக அணிகளை பொருத்த வரை பப்ஜி பி.எஸ்.4 பப்ஜி பி.எஸ்.4 பிக்சல் ஆர்ட் பாராசூட் உடன் வழங்கப்படுகிறது. பிளே ஸ்டேஷனில் விளையாட கேமர்கள் தங்களது கேமில் லாக்-இன் செய்தாலே போதும். பிளே ஸ்டேஷனுக்கென இருக்கும் நீல நிற பாராசூட் கிடைக்கும்.

    இதனுடன் நாதன் டிரேக் டெசர்ட், அன்சார்ட்டெட் உள்ளிட்டவை பி.எஸ். 4 கேமில் இருக்கும். மேலும் எலைட் பேக்பேக்கில் இருந்து தி லாஸ்ட் ஆஃப் யு, பப்ஜி அவதார், பப்ஜி மிராமர் போன்ற தீம்கள் பிளே ஸ்டேஷனுக்கு என பிரத்யேக அணிகளாக இருக்கின்றன.

    பப்ஜி பி.எஸ்.4: டிஸ்க் எடிஷன், பப்ஜி லூட்டர்ஸ் எடிஷன், பப்ஜி சர்வைவர்ஸ் எடிஷன் மற்றும் பப்ஜி சேம்பியன்ஸ் எடிஷன் என நான்று வெர்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பப்ஜி லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டுமே. பப்ஜி சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை அடங்கும்.

    பப்ஜி சேம்பியன்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 6,000 ஜி காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் தவிர எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலில் மட்டும் பப்ஜி வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இந்த கேம் பிளே ஸ்டேஷனிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ். 4 வெளியீட்டிற்கு முன்னரே பப்ஜி டெவலப்பர்கள் கேமின் முழு வரைபடத்தை அவர்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.
    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4



    பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

    பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.



    பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

    டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
    லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
    சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
    சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
    பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

    பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×