search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric buses"

    • ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் ஓடும்
    • புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்சார பஸ்களின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பஸ்களின் விநியோகம், இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் அரசு விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

    நகர்ப்புறங்களுக்குள் 15 வழித்தடங்களில் மின்சார பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன. புதுவை போக்குவர த்துத்துறை 25 மின்சார பஸ்களை இயக்கவும், பராமரிக்கவும் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு கடிதம் வழங்கியுள்ளது.

    டெண்டர் விடப்பட்டு, அரசின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இந்தக் கடிதம் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் கடிதம் வழங்கியுள்ளதாகவும் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டா ரங்கள் தெரிவித்துள்ளது.

    இந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் மின்சார பஸ்களை இயக்குகிறது. முதல் மின்சார பஸ்சின் முன்மாதிரி 45 நாட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    அந்த பஸ்கள் தனி வண்ணத்தில் இருக்கும். 25 பஸ்களில் 10 ஏசி பஸ்களும் 15 பஸ்கள் சாதாரணமாகவும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் 6-7 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரத்திற்கு பஸ்களை இயக்கலாம். சார்ஜ் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆகும்.

    மின்சார பஸ்களுக்கு சார்ஜிங் செய்ய 2 இடங்களில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது.

    40 பயணிகள் வரை அமரும் திறன் கொண்ட உயர் ஆற்றல் கொண்ட பேட்டரியில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 12 மீட்டர் நீளமுள்ள 570 மின்சார பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • 2025ம் ஆண்டுக்குள் டெல்லியின் சாலைகளில் 10,000 பேருந்துகள் இயக்கப்படும்

    டெல்லி அரசு 2025 டிசம்பருக்குள் 2,026 மின்சார பேருந்துகளை தனது சேவையில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இதில், முதல் 100 பேருந்துகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் மிகப்பெரிய மின்சார பேருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஎம்ஐ எலக்ட்ரோ, டெல்லி போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறைக்கு தலா 728 ஒன்பது மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை வழங்குவதாக அறிவித்தது.

    இது தவிர, 12 மீட்டர் நீளமுள்ள 570 மின்சார பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிக்கையின்படி, 2026 மின்சார பேருந்துகள் இயக்குவதன் மூலம் அடுத்த 12 ஆண்டுகளுக்கு டெல்லியில் 14.50 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடை சேமிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து பிஎம்ஐ எலக்ட்ரோவின் தலைவர் சதீஷ் ஜெயின் கூறுகையில், "டெல்லி அரசாங்கத்திற்கு பேருந்துகளை சீராகப் பராமரிப்பதில் நிறுவனம் உதவும்" என்றார்.

    டிஎம்ஆர்சி உத்தரவின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட பிஎம்ஐயின் 100 பேருந்துகள் தற்போது டெல்லியில் இயங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மின்சார பேருந்துகள் அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உகந்த செயல்திறன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

    நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பேருந்துகள் இயங்குகின்றன.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "2025ம் ஆண்டுக்குள் டெல்லியின் சாலைகளில் 10,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் என்றும் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்" என்றார்.

    • புதுவை, பெங்களூரு, திருப்பதிக்கு முதல் மின்சார இன்டெர்சிட்டி பஸ் சேவையை தொடங்கியுள்ளது.
    • சென்னையிலிருந்து புதுவைக்கு 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    கிரீன் மொபலிட்டி நிறுவனத்தின் பிரீமியம் மின்சார பஸ் பிராண்டான நியூகோ சென்னையிலிருந்து புதுவை, பெங்களூரு, திருப்பதிக்கு முதல் மின்சார இன்டெர்சிட்டி பஸ் சேவையை தொடங்கியுள்ளது.

    சென்னையிலிருந்து புதுவைக்கு 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.319 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தி லிருந்து இந்த சேவை தொடங்குகிறது.

    இந்த சேவைக்கு நியூகோ இணை யதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SPVelumani
    கோவை:

    கோவையில் புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்திற்கு புதிய பஸ் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி கோவை கோட்டத்திற்கு 43 பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் கோவை மண்டலத்திற்கு 10 பஸ்களும், திருப்பூர் மண்டலத்திற்கு 28 பஸ்களும், ஈரோடு மண்டலத்திற்கு 5 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    கோவை கோட்டத்திற்கு உட்பட்ட புதிய பஸ்கள் தொடக்க விழா கோவை உக்கடத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    அதன்படி கோவை திருச்சிக்கு 2 பஸ்களும், ராமேஸ்வரத்திற்கு 2 பஸ்களும், குமுளிக்கு 2 பஸ்களும், திருவண்ணாமலை, சிவகாசி, நெல்லை, கும்பகோணத்திற்கு தலா ஒரு பஸ்களும் புதிதாக இயக்கப்படுகிறது.

    புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா வழியில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.

    தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி வருகிறார்கள். மேம்பாலம், சாலை விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், மல்டி லெவல் கார் பார்க்கிங், மெட்ரோ ரெயில் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    கோவையிலும் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செலவுகள் குறையும். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 20 ஆயிரத்து 440 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய பஸ்கள் தொடக்க விழாவில் கலெக்டர் ஹரிஹரன், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் முத்து கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், குணசேகரன், தனியரசு, தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், சி.டி.சி தொழிற்சங்க செயலானர் சி.டி.சி.சின்ராஜ்பகுதி செயலாளர்கள் விமல் சோமு, செல்வகுமார் மற்றும் காட்டூர் செல்வராஜ்,பப்பாயா ராஜேஷ், பால முரளி, காலனி ராஜ்குமார், எம்.பி.பாண்டியன், கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சென்னையில் மின்சார பஸ்கள் இயக்குவது தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காற்று மாசுபாட்டினை குறைக்கும் மின்சார பஸ் திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மார்ச் 28-ந் தேதி தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கும், சி-40 முகமைக்கும் இடையே அறிக்கை கையெழுத்தானது.

    இதன் தொடர்ச்சியாக சி-40 முகமையின் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜேம்ஸ் அலெக்சாண்டர், ஜீர்கன் பாமான், 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னையில் முகாமிட்டு, தமிழக போக்குவரத்து, நிதி மற்றும் எரிசக்திதுறையின் உயர்மட்ட அரசு அலுவலர்களை சந்தித்து கலந்தாய்வு செய்தனர். குறிப்பாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.டபுள்யூ.சி.டேவிதாருடன் கலந்து ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்து, இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    வெளிநாட்டு பிரதிநிதிகள் சென்னையில் 4 நாட்களாக முகாமிட்டு எந்தந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்குவது, அதற்கான டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசித்து இறுதியாக என்னை சந்தித்து இத்திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

    மேலைநாடுகளில் இது போன்ற மின்சார பஸ்களை இயக்கும்போது நடைமுறையில் ஏற்படுகின்ற சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில் சென்னையில் இந்த பஸ்களை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மின்சார பஸ்களின் விலை மிக அதிகம். ஆனால் இயக்கப்படும் செலவு குறைவு. இவ்வகை பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம். ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தூரம் குறையும். மேலும், பஸ்களை சார்ஜ் செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

    முதல்-அமைச்சர் அண்மையில் 515 புதிய பஸ்களை தொடங்கிவைத்தார். ஓரிரு மாதங்களில் அடுத்த 500 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட உள்ளது. மேலும் 4 ஆயிரம் பஸ்கள் படிப்படியாக இயக்க வழிவகை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ElectricBus
    ×