search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electoral"

    • விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடந்தது.
    • கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சிவகாசி,

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்த ஆலோசனைக்கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் நடந்தது. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.

    விடுபட்டுள்ள வாக்கா ளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுத லானவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா? எனவும் சரி பாருங்கள்,

    வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலை வர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி என்ற ராஜ அபினேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தேர்தலிலும், எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. #AAP #Congress #AjayMaken
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்து வருகிறது. அதே சமயம் பா.ஜ.க 2014-க்கு பிறகு நாட்டின் பல மாநிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.



    பா.ஜ.க.வின் பலத்தில் மோத முடியாமல் பல கட்சிகள் தோல்வியை தழுவின. மேலும், பல மாநிலங்களில் கூட்டணி மூலமே ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பண பலத்தாலும், பதவி பலத்தாலுமே ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுகிறது.

    நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க அம்மாநில பா.ஜ.க. பல வழிகளில் முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு குறைத்து அறிவித்தது.

    இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. அசுத்தமான அரசியல் செய்வதாகவும், மக்களை வஞ்சிக்க வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தகவல் அல்ல; வெறும் வதந்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தேர்தலிலும், எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, தலைநகர் டெல்லியில் இன்று மாலை பேட்டியளித்த டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 56-57 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, 2017-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி நகராட்சி தேர்தலில் 26 சதவீதம் வாக்குகளைதான் வாங்கியுள்ளது. அதேவேளையில்,
    9.5 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மேலும், கடந்த பொது தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றிருந்த ரஜோரி கார்டன் மற்றும் பாவனா சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

    எனவே, டெல்லியில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு சரிந்து விட்டதை இந்த இடைத்தேர்தல்கள் நிரூபித்துள்ளன. ஆம் ஆத்மி ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்துள்ள நிலையில் 2019- பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #AAP #Congress #AjayMaken
    ×