search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly man arrest"

    • 16 வயது சிறுமிக்கு, முதியவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    மாமல்லபுரம்:

    மதுராந்தகத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது67). பிரபல தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை சேர்த்து விடும் ஏஜெண்டாக இருந்தார். இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் நர்சிங் அகாடமி ஒன்றில் பெண்களை சேர்த்து விட வந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த வாத்திப்பாளையம் ஊமை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு 11 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகள் உள்ளார்.

    சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமி விடுமுறைக்காக வாத்திப்பாளையத்துக்கு வந்திருந்தார். காலையில் சத்தியாவும், சரவணனும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது எழுமேடு அகரம், திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (58) என்பவர் சிறுமியை கத்திரிக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதை அறிந்த சிறுமியின் தாயார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மாரிமுத்து வை கைது செய்தனர்.
    சேலத்தில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த முதியவர் சின்னசாமி என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சின்னசாமி மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குடிபோதையில் மாணவியிடம் அத்துமீறியது தெரியவந்தது.

    இதையடுத்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    திருமங்கலம் அருகே 9-ம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி திருமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பால்பாண்டி (62) என்பவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.

    அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பால்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    மதுரை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள சிந்தாமணி ரோட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கரன் (54) என்பவர் மிட்டாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரின் வன்மத்தை அறியாத அந்த சிறுமியும் பாஸ்கரனுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு பாஸ்கரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அந்த சிறுமி அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாயார் மகளிடம் விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
    தேவதானப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு வந்த 13 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனை வெளியே சொல்லக் கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். அழுது கொண்டு வந்த சிறுமி தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் செல்வராஜ் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    போரூர் காரம்பாக்கம் அருணாசலம் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் பணியாற்றி வருபவர் அப்துல் கரீம் (வயது 67). இவர் மசூதிக்கு சொந்தமான இடம் மிக குறைந்த விலையில் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக பலரிடம் கூறி வந்தார்.

    இதை நம்பி மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையை சேர்ந்த டெய்லர் ஜாகீர்அகமது கடந்த 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அப்துல்கரீமிடம் கொடுத்தார். ஆனால் அப்துல்கரீம் இதுவரை ஜாகிர் அகமதுவுக்கு இடத்தையும், கிரையம் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகிர்அகமது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அப்துல்கரீமை கைது செய்தார். #Tamilnews

    ×