search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலம் விற்பதாக ரூ.1 லட்சம் மோசடி- முதியவர் கைது
    X

    நிலம் விற்பதாக ரூ.1 லட்சம் மோசடி- முதியவர் கைது

    போரூர் காரம்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    போரூர் காரம்பாக்கம் அருணாசலம் கார்டன் பகுதியில் உள்ள மசூதியில் பணியாற்றி வருபவர் அப்துல் கரீம் (வயது 67). இவர் மசூதிக்கு சொந்தமான இடம் மிக குறைந்த விலையில் தம்மிடம் விற்பனைக்கு உள்ளதாக பலரிடம் கூறி வந்தார்.

    இதை நம்பி மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையை சேர்ந்த டெய்லர் ஜாகீர்அகமது கடந்த 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை அப்துல்கரீமிடம் கொடுத்தார். ஆனால் அப்துல்கரீம் இதுவரை ஜாகிர் அகமதுவுக்கு இடத்தையும், கிரையம் செய்து தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகிர்அகமது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் வழக்குப்பதிவு செய்து அப்துல்கரீமை கைது செய்தார். #Tamilnews

    Next Story
    ×