search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ealumalayan temple"

    • பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.

    உடுமலை :

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கேரள மாநிலம் மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.மலைமேலுள்ள தீர்த்த கிணற்றில் நீர் எடுத்து அவுல், பச்சரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

    மலையடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக வரிசை தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்திலேயே, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை மற்றும் காகித பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
    • சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

    இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நோய் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்த நிலையில் இந்த ஆண்டு ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தயாராகி வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் புரட்டாசி மாதம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமைகளில் பக்தர்கள் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மலை அடிவாரப்பகுதிக்கு வருகை தந்தனர்.

    பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் எழுப்பியும் பக்தி பாடல்களை செல்போன்களில் கேட்ட படியும் பக்தி பரவசத்தோடு மலை ஏறிச்சென்று ஏழுமலையானுக்கு தேங்காய், பழம், அவல் படைத்து வழிபட்டனர். நேற்று முதல் வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. மலைவாழ்மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

    விழாவையொட்டி வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் வனத்துறையினருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வருகிறவாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மலையடிவாரப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் வனத்துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனவிலங்குகள் மற்றும் வனத்தின் இயற்கை தன்மையை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×