search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drawing Competition"

    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் முருக பிரசன்னா, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் நடைபெற்றது. இதில் ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவர்்் மட்டுமே கலந்து கொண்டு 4 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 46 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

    முடிவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இன்று நடந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    • மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன

    உடுமலை :

    நாடு முழுவதும் பள்ளிகளில் வரும் மாதங்களில் முழு ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வு நடக்கவுள்ளன. இதற்காக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பொதுவாக தேர்வு சமயங்களில் அவர்களுக்கு ஒரு வித அச்சம் எழுகிறது. இதை போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    இதன் வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி நடத்தி வரும் பரீட்சா பே சர்ச்சா எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி புது டெல்லியில் நடக்கிறது.

    அதில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார். அதன் ஒரு பகுதியாக தேசிய அளவில், 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியில், 15 பள்ளிகளைச்சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதற்கான உபகரணங்கள் மட்டுமின்றி, பிரதமர் மோடி எழுதிய 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகமும் வழங்கப்பட்டன. முடிவில் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
    ஊட்டி:

    தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீலகிரி மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுப்போட்டி நீலகிரி பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அல்லது இனி எப்பொழுதும் வேண்டாம் நெகிழி என்ற தலைப்பில் நடந்தது.

    ஓவிய போட்டி இயற்கை விவசாயமும், நீலகிரியின் எதிர்காலமும் அல்லது நீலகிரியின் பல்லுயிர் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், வினாடி-வினா போட்டி நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம் என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது. போட்டி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் மேற்பார்வையிட்டார். போட்டிகள் முடிவு விவரம் வருமாறு:-

    பேச்சுப்போட்டியில் கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மோனிஷ்குமார் முதல் இடம், மிலித்தேன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா 2-வது இடம், பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி 3-வது இடம், ஓவிய போட்டியில் குஞ்சப்பணை அரசு உண்டு உறைவிடப்பள்ளி மாணவர் அசோக்குமார் முதலிடம், கூடலூர் அரசு பள்ளி மாணவர் ரினுஷீத் 2-ம் இடம், ஊட்டி சி.எஸ்.ஐ. ஜெல் மெமோரியல் பள்ளி மாணவி மாளவிகா 3-ம் இடம் பிடித்தனர்.

    வினாடி-வினா போட்டியில் பிக்கட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அஜய்ராஜ் முதல் இடம், வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி. பள்ளி மாணவர் அருண்குமார் 2-வது இடம், கேர்கெம்பை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மனோன்மணி 3-வது இடத்தை பிடித்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் இயற்கை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு, நீலகிரி மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 
    கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் எம்.எஸ்.தேவசகாயம் கலைகள்-கைவினைகள் மையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி கரூர் ஜவகர்பஜார் அருகேயுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஓவிய திறமைகளை வெளிப்படுத்தினர். 1-3, 4-5, 6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனிதனியாக போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் இயற்கை காட்சிகள், தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தினர். ஓவிய ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், ஓவிய போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கரூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லையரசு வரவேற்று பேசினார். விழாவிற்கு கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் தலைமை தாங்கி, ஓவிய போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில் நாணயவியல்-கல்வெட்டியல் ஆய்வாளர் ராஜூ, பேராசிரியர் மாரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், கரூர் அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால உலோக பொருட்கள், மரசிலைகள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவற்றின் வரலாறு, தொன்மை குறித்து அருங்காட்சியக பணியாளர்கள் விளக்கி கூறினார்கள்.
    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது.
    பெரம்பலூர்:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது. போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை தொடர்பான ஓவியங்களை ஆர்வத்துடன் வரைந்தனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மழலையர் முன்னேற்ற மன்றத்தின் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

    சமூக ஆர்வலர் முகம்மது இக்பால் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளியின் தாளாளர் மங்கை விஜயா, கல்லூரி பேராசிரியை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்பட்டது.
    ×