search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science Centre"

    • சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது.
    • நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சந்திர கிரகணத்தை காண அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான பகுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது. அந்த நிகழ்வை காண்பதற்காக நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அதிகாரி மாரி லெனின் செய்திருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவி கள் அழைத்து வரப்பட்டு பார்வையிட்டனர். ராயகிரி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்து தொலைநோக்கியை பார்வையிட்டனர்.

    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் முருக பிரசன்னா, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் நடைபெற்றது. இதில் ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவர்்் மட்டுமே கலந்து கொண்டு 4 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 46 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

    முடிவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இன்று நடந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பாபநாசம் உலக தமிழ் மருத்துவ கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

    இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகைகள் மற்றும் அதன் மகத்துவம், பயன்படுத்தும் முறைகள், பங்கேற்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூலிகைகள் குறித்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வெள்ளைப்பூண்டு கொடி மூலிகை பற்றிய விளக்கங்களை பார்வையாளர்கள் கேட்டு பெறலாம்.

    நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்படுகிறது.

    எனவே இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது இந்த மாதம் 1 மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் நடக்கிறது.
    • இதுதொடர்பான விவரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்ைல கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் மூலிகைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் உலக தமிழ் மருத்துவக்கழகம் இணைந்து நடத்தும் மூலிகை முற்றம் 2.0 என்ற மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது இந்த மாதம் 1 மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில் மஞ்சள் கரிசாலை மூலிகை பற்றிய விளம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.

    இதுதொடர்பான விவரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட அறிவியில் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்துள்ளார்.

    ×