search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi LG"

    • டெல்லி துணைநிலை ஆளுநர் ஏற்கனவே இரண்டு மோசடி தொடர்பான குற்றச்சாட்டி விசாரிக்க உத்தரவு.
    • தற்போது மேலும் ஒரு மோசடி தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் மோதல் இருந்து கொண்டே வருகிறது.

    இந்த மோதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வெற்றி பெற்றாலும், மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி மாநில அரசின் அதிகாரத்தை குறைத்தது. இதற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து கட்சிகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.

    தற்போது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவர்கள் சிக்கியுள்ளனர். அமலாக்கத்துறையால் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாக துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்து செய்து வருகிறார். மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில்தான் ஆம் ஆத்மியின் மோஹல்லா கிளினிக்கில் இல்லாத நோயாளிகளுக்கு போலி ஆய்வக பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நோயாளிகளை குறிக்க போலி மற்றும் நடைமுறையில் இல்லாத மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் போலி மருந்து வழக்கு, காடு மற்றும் வனவிலங்கு துறை தொடர்பான மோசடி குறித்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி துணை நிலை ஆளுனர் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்
    • காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலை என்கிறார் டாக்டர். அர்விந்த் குமார்

    புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.

    காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.

    இதனால் பல உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே. சக்சேனா, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.

    இந்நிலையில், அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் டாக்டர். அர்விந்த் குமார் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து கூறியதாவது:

    ஏர் ப்யூரிஃபையர் (air purifier) எனப்படும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்கள் தற்போதைய சூழலுக்கு ஒரு தீர்வு அல்ல. காற்று மாசு ஒரு பொது சுகாதார பிரச்சனை. வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரத்திற்கான குறியீடு 500 எனும் அளவில் இருந்தால், சுத்திகரிக்கும் சாதனங்கள் அதை 15 அல்லது 20க்கு கொண்டு வராது. காற்றின் தரம் குறைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வருவதாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல குழந்தைகள் அகாலமாக உயிரிழக்கவும் இது காரணமாகிறது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு வட இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இது ஒரு தேசிய அவசர நிலை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் தரங்குறைந்த காற்று பாதிக்கும். எளிதாக இது ஆஸ்துமா நோய் வர வழிவகுக்கும். டெல்லியில் 1100 குழந்தைகளை ஆய்வு செய்ததில் 3 பேரில் 1 குழந்தை எனும் விகிதத்தில் ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் இது பாதிக்கிறது. சுமார் 25 சிகரெட் புகைத்தால் வரும் நுரையீரல் நோய்கள், காற்று மாசு காரணமாக புகை பிடிக்காதவர்களுக்கும் வர கூடும்.

    இவ்வாறு டாக்டர். அர்விந்த் கூறினார்.

    டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. #ArvindKejriwal #DelhiDharnaPolitics
    புதுடெல்லி:

    டெல்லி தலைமை செயலாளர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து அம்மாநில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்ததாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை கவர்னர் முட்டுக்கட்டை போட்டார்.

    இதனால், கடந்த 11-ம் தேதி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால், சந்திப்புக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அங்கு உள்ள வரவேற்பறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    உண்ணாவிரத போராட்டம் நடத்திய சிசோடியா உள்ளிட்ட இருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவருடன், துணை  முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் இரண்டு மந்திரிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்தினர். 

    இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து அரசு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த துணை நிலை கவர்னர், கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் அறிவுறுத்திய நிலையில், தனது 9 நாள் தர்ணா போராட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் முடித்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ×